என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, செப்டம்பர் 15, 2012

21 இவர்தான் அறிஞர் அண்ணா.....




காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை....... இப்படிச்சொன்னால் இந்தத் தலைமுறையினருக்கு தெரியாது. அறிஞர் அண்ணா. இப்படி சொன்னால்தான் தெரியும். காஞ்சிபுரத்தில் 1909-ஆம் ஆண்டு சாதரண குடும்பத்தில் பிறந்து 1969-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக மறைந்தவர். அண்ணாவின் மறைவையொட்டி நடந்த இறுதி ஊர்வலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையாக பதியப்பட்டு இன்றுவரை யாராலும் மன்னிக்கவும் எந்த மரணத்தாலும் முறியடிக்கப்படவில்லை.

அண்ணா ஆரம்பித்த தி.மு.க.,விலிருந்து அண்ணாவையே சந்தித்திராத விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க.,வரை அத்தனை திராவிடக்கட்சிகளும் அண்ணாவின் பெயரை சொல்லாமல், அண்ணாவின் படத்தை போடாமல் கட்சியே நடத்த முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆளுமையும் செல்வாக்கும் மிகப்பெரியது. சரி எதற்கு இந்த விளக்கமெல்லாம் என்று நினைக்கிறீர்களா? சொல்றேன்......

சமீபத்தில் நண்பர் செங்கோவி இந்தியா வந்திருந்தபோது, அடிக்கடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்வார். அப்படி ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றி பேச்சுவந்தது.பேச்சுவாக்கில் அண்ணாவின் வரலாறை எழுதுங்களேன் தொகுத்து தாருங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தார். நானும் ஏதோ ஒரு நம்பிக்கையில் சரியென்று சொல்லிவிட்டேன். இதற்கு முன்பு ஜெயலலிதாவின் அரசியல் வரலாறை எழுதும்படி சொன்னார்.ஜெயலலிதாவின் அரசியல் வரலாறை தொகுப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

காரணம், என் சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்பதால் என் நினைவில் இருந்த விஷயங்களையும், இணையத்தில் கிடைத்த விஷயங்களையும் சேர்த்து நேர்த்தியாக மூன்று பாகங்களாக தொகுத்தளித்தேன். அதன்பின் எம்.ஜி.ஆரின் வரலாறை தொகுக்கும்படி சொன்னார். நானும் அப்படியே இரு பகுதிகளாக 15 பாகங்களாக தொகுத்து பதிவிட்டேன்.

ஆனால், அண்ணா விஷயம் அப்படியில்லை. நிறைய தேடவேண்டி இருக்கிறது. ஒரு முன்னோட்டமாக இந்த விஷயத்தை எழுதிவிட்டு வரும் வாரங்களில் அண்ணாவை பற்றி இன்னும் விளக்கமாக பதிவுவரும்(இறைவன் நாடினால்....). கடந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பதிவிற்கு நீங்கள் வழங்கிய அதே அபரிதமான ஆதரவை அண்னாவிற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.


அண்ணா ஒரு முன்னோட்டம்.........

1909 _ காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில், எளிய நெசவாளர் குடும்பத்தில், நடராசன் - பங்காரு அம்மாள் தம்பதியருக்கு செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவரது வளர்ப்புத் தாய் சிற்றன்னை இராசாமணி அம்மையார்.

1914_ காஞ்சிபுரம், பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.


1927_ காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சில மாதங்கள் பணிபுரிந்தார்.


1928_ சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார்.


1929_ பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கற்பட்டு நகரில் நடந்த, முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.


1930_ பச்சையப்பன் கல்லூரி முதல்வரின் உதவியால், உதவித்தொகை பெற்று பி.ஏ(ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே, பெற்றோர் விருப்பப்படி, காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கும், இராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.


1931_ மார்ச் 19 இல் தமிழ் மருத்துவர் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு என்ற ஏட்டில் மகளிர்கோட்டம் என்னும் கட்டுரையே இவர் எழுதி வெளிவந்த முதல் கட்டுரையாகும்.


1932_ நீதிக்கட்சி அரசின் முதலமைச்சரான பொப்பிலி அரசர் தொடர்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது.


1934_ திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடினார். அன்று முதல் பெரியாரைத் தனது ஒரே தலைவராக ஏற்றார். பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்றதும், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதார வசதி இன்மையால் மூன்று மாதங்களுக்கு மேல் சட்டப்படிப்பை தொடர முடியவில்லை.


1935_ சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார்.


நீதிக்கட்சித் தலைவர் சி.பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து தொடங்கிய பாலபாரதி என்ற வார ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து தொழிலாளர் நலம் பேணும் கட்டுரைகளை வரைந்தார்.


1936_ சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டையில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.


1938_ விடுதலை குடியரசு ஏடுகளின் துணை ஆசிரியர் ஆனார். ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டிற்கும் துணைஆசிரியராக இருந்தார். செப்டம்பர் 26 இல் பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று நான்கு மாதம் சிறைவாசம் ஏற்றார்.


1939_ நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940_ மும்பையில் (பம்பாய்) தந்தை பெரியார் _ டாக்டர் அம்பேத்கர் சந்திப்பின்போது, மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.


1942_ மார்ச் 7: திராவிடநாடு வார ஏட்டின் ஆசிரியர் ஆனார்.


1944_ சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணா தீர்மானம் மூலம், நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது.


1945_ டிசம்பர்: சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்னும் நாடகம் அரங்கேற்றம். இதை அண்ணா அவர்களே எழுதி அதில் காகப்பட்டர் பாத்திரம் ஏற்று நடித்தார்.


1946_ ஜூலை 29: நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி அளித்தார்.


1947_ ஆகஸ்ட் 15: இந்நாளை பெரியார் துக்கநாள் எனல் பொருந்தாது என்றும், இந்நாள் திருநாளே என்று திராவிடநாடு ஏட்டில் அண்ணா எழுதினார்.


1948_ ஜூலை 17: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் ஏற்றார்.


1949_ஜூலை 9: தந்தை பெரியார் மணியம்மையார் திருமணம் நடந்தது.


அண்ணாவும் மற்றும் பலரும் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 17இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்தனர்.


திமுகவின் முதல் பொதுச்செயலாளராக அண்ணா பொறுப்பேற்றார்.


1950_ ஆரியமாயை என்னும் நூல் எழுதியதற்காக ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.


1952_ இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு இந்தி எழுத்துகளை அழித்தார்.


1953_ ஜூன் 15: நம்நாடு நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


ஜூலை 15: மும்முனைப் போராட்டத்தில் முன்னாதாகவே கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.


1955_ ஜனவரி 14: அண்ணா, கதை வசனம் எழுதிய சொர்க்கவாசல் என்னும் திரைப்படம் வெளிவந்தது.


1956_ மே17_20: திருச்சிராப்பள்ளியில் நடந்த திமுக இரண்டாவது மாநில மாநாட்டில் பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தி திமுக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுமக்கள் அனுமதியைப் பெற்றார்.


1957_ காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஜூன்9: ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


1958_ ஜனவரி 3: பிரதமர் நேரு அவர்கள், ஜனவரி 6இல் சென்னைக்கு வரும்போது, கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் ஏற்றார்.


1962_ காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.


ஹோம்ரூல் ஆங்கில வார இதழ் ஆசிரியர் ஆனார். ஜூலை 19: விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில கைதாகி, வேலூர் சிறையில் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. விடுதலையான அண்ணா நாட்டின் யுத்த முயற்சிகளுக்குப் பல உதவிகள் செய்தார்.


1963_ ஜனவரி: கட்சியின் கோரிக்கை பிரிவினை அல்ல என்பதற்கேற்ற மாற்றம் செய்து கட்சியைக் காப்பாற்றினார். நவம்பர் 17: கட்டாய இந்தி 17ஆவது மொழிப் பிரிவுச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் நவம்பர் 16 அன்றே கைதாகி, ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.


1964_ஜூலை 26: ஆசிரியர் பொறுப்பேற்று காஞ்சி வார ஏட்டைத் தொடங்கினார்.


1965_ஜனவரி 26 முதல், இந்தியை, இந்திய யூனியன் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு பரிந்துரை செய்ததை எதிர்த்து, ஜனவரி 26 துக்கநாள் என திமுக அறிவித்தது தொடர்பாக அண்ணா சிறைவாசம் ஏற்றார்.


ஜூலை: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.


1967_ பொதுத்தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத்தேர்தலில் சட்டமன்றத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்றது.


மார்ச் 6: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.


ஏப்ரல் 26: தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.


மே 15: ரூபாய்க்குப் படியரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


ஜூலை 18: சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்றுஅழைக்க அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.


ஜூலை 23: சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மய்ய அரசை வற்புறுத்திட, தமிழ்நாடெங்கும் சேலம் எழுச்சி நாள் நடத்தினார்.


ஆகஸ்ட் 16: சீரணி என்னும் அமைப்பினை உருவாக்கினார்.


செப்டம்பர் 19: சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.


1968_ ஜனவரி 1: உலகத் தமிழ் மாநாட்டினை ஒட்டி, டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் வழங்கப்-பட்ட பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலை சென்னை மவுண்ட் சாலையின் (தற்போதைய அண்ணா சாலை) மய்யத்தில் திறந்து வைக்கப்பட்டது.


ஜனவரி 2: தமிழ் வளர்த்த சான்றோருக்கு, சென்னை கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார்.


ஜனவரி 3: உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ.9 இலட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.


ஜனவரி 23: தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார்.


ஏப்ரல், மே: அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் சென்று வந்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக் கழகத்தில் சப் பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப் அவர்களைச் சந்தித்தார்.


செப்டம்பர் 8: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


செப்டம்பர் 16: அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவமனையான மெமோரியல் மருத்துவமனையில், டாக்டர் மில்லர் என்பவரால் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


நவம்பர் 6: சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பினார்.


டிசம்பர் 1: உடல்நலம் கெட்டிருந்தும் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.


1969_ ஜனவரி 14: பொங்கல் தினத்தில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதுதான் அண்ணா கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி.


ஜனவரி 25: அமெரிக்க டாக்டர் மில்லர் சென்னை வந்து அண்ணாவுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்.


பிப்ரவரி 3: (பிப்ரவரி 2 நள்ளிரவு 12.20 மணி) சென்னையில் இயற்கை எய்தினார். அண்ணாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.


பிப்ரவரி 4: அண்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டத்திற்கு எதிரில் மெரினா கடற்கரையில் காலை 11.30 மணிக்கு சந்தன மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.


நன்றி : விடுதலை 


தாமதத்திற்கு மன்னிக்கவும்...........இனி வாரந்தோறும் அண்ணா வருவார். 



Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. இவரை போல இப்போ ஒருவர் கூட இல்லை....அரசியலில்...உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. அண்ணா பற்றிய நல்ல பதிவு. முடிந்தால் அவரைப்பற்றி எழுதிய வரிகளுக்கு நீங்கள் கொடுத்த கலரை எடுத்துவிட்டால் படிக்க மிக எளிதாக இருக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா பிறந்த நாளில் அவர் பற்றிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //இன்றுவரை யாராலும் மன்னிக்கவும்//

    மறக்கவும் என வந்திருக்க வேண்டுமோ??!! இருங்க பெரிய கண்ணாடி போட்டு தப்பெல்லாம் கண்டுபிடிக்கிறேன் :-))

    பதிலளிநீக்கு
  5. எம்மைப்போன்றவர்களுக்கு மட்டுமல்லாது கல்லூரி, பள்ளி மாணவ்ர்களுக்கும் இந்த கட்டுரை உதவும்.. இன்ஷா அல்லாஹ் தொடருங்கள் அண்ணே

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,கஸாலி சார்!அண்ணா பிறந்த நாளில் அவர் குறித்த தகவல்களை எமக்குத் தெரியப்படுத்தியது மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் அரசியல் அறிவை கண்டு வியப்பாக உள்ளது. உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
    வரலாற்று நாயகர்கள் அனைவருடய வெற்றிகளும் எளிதில் கிடைக்கவில்லை அதில் திரு.அண்ணா மட்டும் விதிவிலக்கா என்ன?பல தோல்விகளுக்குப்பின் தனது விடாமுயற்சியின் மூலம் வெற்றிகனியை திரு.அண்ணா அவர்கள் எட்டியிருக்கிறார்கள்.அவ்வப்போது வரலாறை ரீவைண்ட் செய்வது நல்லது.வரலாற்றை உங்களுடைய தளத்தில் பதிவாக இடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோ.
    சிறிய வேண்டுகோள்:
    நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள விரிசல் என்ன?சந்திரபாபு ஏன் தற்கொலை செய்துகொண்டார்? இதைப்பற்றியும் ஒரு தனிபதிவாக அறிய தரவும் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கேள்விக்கான பதிலை அரசியல்வாதி தளத்தில் இன்ஷாஅல்லாஹ் திங்கள் கிழமை தருகிறேன். அங்கு வந்து படித்துக்கொள்ளுங்கள்.
      http://arasiyalvaadhi.blogspot.com/

      நீக்கு
  9. கண்டிப்பாக நம் தலைமுறையினர் அறிந்து வைத்து கொள்ள வேண்டிய தலைவர் அண்ணா...பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. சபாஷ்... ஆரம்பம் அருமையாக இருக்கிறது. உங்களின் தளராத முயற்சியில் இதற்கு முன் வந்த தலைவைர்களின் தொடர் போல இதுவும் சிறப்பாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் தம்பி. அனைவரும் அறிய வேண்டிய நல்ல விஷயத்தை நீங்கள் செய்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. குள்ளமான உருவம் ஆனாலும் அண்ணாவை நிமிர்ந்து தான் பார்க்க முடியும்...ஆளும் கட்சி எதிர் கட்சி எதுவாக இருந்தாலும் அண்ணாவின் பெயரை உச்சரிக்காமல் இன்று ஆட்சி செய்ய முடியாது...

    'அண்ணா'ந்து பார் - என்ற நூல் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்...ஆசிரியர் - திரு என்.சொக்கன்

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு பகிர்வு! புதிய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியது! எனக்கும் பல தகவல்கள் புதுசு! நன்றி நண்பரே!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    பதிலளிநீக்கு
  13. கஸாலி...

    நிச்சயம் இதை நீ சிறப்பாக எழுதி முடிப்பாய் என்ற நம்பிக்கை உள்ளது.. உனது அரசியல் அறிவு கண்டு நான் பொறாமை கொள்கிறேன் நண்பா....

    பதிலளிநீக்கு
  14. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் கஸாலி..தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. //நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள விரிசல் என்ன?சந்திரபாபு ஏன் தற்கொலை செய்துகொண்டார்? இதைப்பற்றியும் ஒரு தனிபதிவாக அறிய தரவும் சகோ.

    Reply
    Replies

    ரஹீம் கஸாலி15-Sep-2012 4:58:00 PM
    உங்கள் கேள்விக்கான பதிலை அரசியல்வாதி தளத்தில் இன்ஷாஅல்லாஹ் திங்கள் கிழமை தருகிறேன். அங்கு வந்து படித்துக்கொள்ளுங்கள்.
    http://arasiyalvaadhi.blogspot.com///

    பதிலில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்..ஹி..ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்கேள்விக்கான பதில் அரசியல்வாதி தளத்தின் ட்ராஃப்டில் தயாராக இருக்கிறது. லாகின் செய்து சரி பார்க்கவும். அதில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுங்க செங்கோவி.

      நீக்கு
    2. அந்தக்கேள்விக்கான பதில் அரசியல்வாதி தளத்தின் ட்ராஃப்டில் தயாராக இருக்கிறது. லாகின் செய்து சரி பார்க்கவும். அதில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுங்க செங்கோவி.

      நீக்கு
  17. நல்லதொரு தொகுப்பு அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.