என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 20, 2012

102 யூத நரியும், அமெரிக்க ஓநாயும் பின்னே முகம்மது நபியும்......




சமீபத்தில் யூதர்கள் எடுத்து அமெரிக்கா மார்க்கெட்டிங்க் செய்த ஒரு டப்பா படத்தை விளம்பரப்படுத்தி விட்டார்கள் இஸ்லாமியர்கள். அப்படியே விட்டிருந்தால் அந்தப்படம் காணாமல் போயிருக்கும். மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி படமோ கார்ட்டூனோ எடுத்தால் அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் இந்த இஸ்லாமியர்கள் மட்டும்தான் இப்படி ஆர்ப்பார்ட்டம், போராட்டாம் என்று இறங்குவார்கள். இதெல்லாம் சமீப நாட்களாக இஸ்லாமியர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்.



இது உண்மைதானா என்று பார்ப்போம். உலகில் எந்த மதத்தை பற்றி இப்படி இழிவுபடுத்தி படம் எடுத்தாலும் அந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆர்ப்பார்ட்டம், போராட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தே வந்திருக்கிறார்கள். ஜீஸஸ் கிறிஸ்துவை இழிவுபடுத்தி  The Da Vinci Code 
(டாவின்சி கோட்) என்ற படம் வந்தபோது அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் போராட்டம் செய்து பல நாடுகளில் அந்தப்படத்தை தடை செய்ய வைத்துள்ளார்கள்.



FIRE என்ற லெஸ்பியன் படம் இந்தியாவில் வெளிவந்தபோது அதன் இயக்குனர் தீபா மேத்தா சந்தித்த பிரச்சினைகள் பல....



விநாயகர், சரஸ்வதி போன்ற ஹிந்து கடவுள்களை கழிவறையிலும், சூ, செருப்பு மற்றும் உள்ளாடைகளில் பொறித்ததற்காக ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சமிபத்திய உதாரணங்கள். சரி விடுங்கள்......அவர்கள் போராடவேயில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக இஸ்லாமியர்களும் அப்படியே இருக்கவேண்டுமா என்ன?
பக்கத்துக்கடையில் ஒருவன் நுழைந்து பிரச்சினை செய்வதை பக்கத்து கடைக்கார முதலாளி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான் என்பதற்காக என் கடையில் ஒருவன் நுழைந்து பிரச்சினை செய்யும்போது நானும் கண்டுக்கள்ளாமல் பக்கத்து கடைக்காரனை போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

எங்கெல்லாம் ஒரு சாரார் அடக்கப்படுகிறார்களோ? அல்லது ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களிலிருந்து ஒரு சிலர் திமிறிக்கொண்டு வெளியே வந்து அடக்குமுறைகளுக்கு எதிராய் குரல் கொடுப்பார்கள். அப்படி குரல் கொடுப்பவர்கள் மாற்று மதத்தினராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர் போராளி.... அவர்களே இஸ்லாமியர்களாக இருந்துவிட்டால் அவர்களின் பெயர் தீவிரவாதி. நல்லாருக்குடா உங்க நியாயம்?

இறைத்தூதரை அவமதிக்கும் படத்தை கண்டுகொள்ளாமல் விட்டுருக்கலாம்தான். இப்படி இலவச விளம்பரம் கொடுத்திருக்க கூடாதுதான். ஆனால், யாரும் அதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இன்னும் சில யூத நரிகள் அமெரிக்க ஓநாயுடன் கூட்டு சேர்ந்துகொண்டு இன்னும் பல படங்களை எடுப்பார்கள். அப்படி எடுக்க கூடாது என்பதற்காகவும், இப்போது எடுத்த படத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான் இத்தனை போராட்டங்கள்.

சரி....அவர்கள் உங்களை தாக்கி படமெடுத்தால் கார்ட்டூன் போட்டால் நீங்கள் யூத கிறிஸ்துவ கடவுள்களை தாக்கி படமெடுத்து கணக்கை நேர் படுத்தி கொள்ளுங்கள். அதை விடுத்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்காக.....

இஸ்லாமியர்கள் அப்படி செய்வதென்பது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல.....ஏனென்றால், யூதர்கள் கடவுளாக நினைக்கும் மோசஸை நபி மூசா(அலை) என்றும், கிறிஸ்துவர்கள் கடவுளாக நினைக்கும் ஜீசஸை நபி ஈசா(அலை) என்றும் (இறைதூதர்களாக) பார்ப்பவர்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் அப்படி செய்ய நினைப்பதே பாவம். சில யூத கிறிஸ்துவர்களின் பலமும் இஸ்லாமியர்களின் பலவீனமும் அதுதான்.

குறிப்பு: நான் மதம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை. அப்படி எழுத என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவன் இப்படி பதிவெழுத காரணம்..... என் மனதில் இருந்த ஆதங்கமே.... இந்த பதிவுக்கு எதிர்பதிவெழுதி எனக்கு இலவச விளம்பரம் கொடுக்க நினைப்பவர்கள் தாராளமாக கொடுக்கலாம் ஹி....ஹி....

ஒரு பதிவு எழுதினாலே அதற்கு எதிர்பதிவு எழுத ஓராயிறம் பேர் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு படத்தை எடுத்தவனுக்கு எதிராக ஏதும் போராட்டம் செய்யக்கூடாதாம். அடப்போங்கப்பா.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


102 கருத்துகள்:

  1. // அவர்கள் போராடவேயில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக இஸ்லாமியர்களும் அப்படியே இருக்கவேண்டுமா என்ன? //

    அதானே.....????

    பதிலளிநீக்கு
  2. // பக்கத்துக்கடையில் ஒருவன் நுழைந்து பிரச்சினை செய்வதை பக்கத்து கடைக்கார முதலாளி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான் என்பதற்காக என் கடையில் ஒருவன் நுழைந்து பிரச்சினை செய்யும்போது நானும் கண்டுக்கள்ளாமல் பக்கத்து கடைக்காரனை போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? //

    அதானே...???? இந்த கேள்வியும் நல்லாத் தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு .

    என் தளத்தில் இன்று

    அறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.

    தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை?


    இங்கு சொடுக்கி படிக்கலாம்.

    >>>> இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? கொடுமைப்படுத்துகிறதா? ஹிஜாப் (பர்தா) <<<<

    .

    பதிலளிநீக்கு
  4. // அப்படி குரல் கொடுப்பவர்கள் மாற்று மதத்தினராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர் போராளி.... அவர்களே இஸ்லாமியர்களாக இருந்துவிட்டால் அவர்களின் பெயர் தீவிரவாதி. /

    அதானே... என்னப்பா நியாயம் இது??? பாத்து செய்ங்க....

    பதிலளிநீக்கு
  5. //ஒரு பதிவு எழுதினாலே அதற்கு எதிர்பதிவு எழுத ஓராயிறம் பேர் இருக்கிறார்கள்//

    பதிலளிநீக்கு
  6. // இஸ்லாமியர்கள் அப்படி செய்வதென்பது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல.....ஏனென்றால், யூதர்கள் கடவுளாக நினைக்கும் மோசஸை நபி மூசா(அலை) என்றும், கிறிஸ்துவர்கள் கடவுளாக நினைக்கும் ஜீசஸை நபி ஈசா(அலை) என்றும் (இறைதூதர்களாக) பார்ப்பவர்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் அப்படி செய்ய நினைப்பதே பாவம். சில யூத கிறிஸ்துவர்களின் பலமும் இஸ்லாமியர்களின் பலவீனமும் அதுதான்.
    //

    இல்லை கஸாலி.... மோஸஸ் மற்றும் ஈஷா நபி இருவரும் நம் உயிரினும் மேலான இறைத்தூதுவர்களாக இல்லாமல் போய் இருந்தாலும், நாம் அவர்களை கேலி பண்ணி சித்திரம் போட முடியாது.... மாற்று மத கடவுள்களை திட்ட நமக்கு அனுமதி இல்லை.... பழிக்கு பழி என்றாலும் அது இஸ்லாமிய வரம்புக்குள் மட்டும் தான் இருக்க முடியும்... வரம்பை மீற முடியாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்று மதக்கடவுள்களை திட்டாதீர்கள். அப்படி திட்டினால் அவர்கள் அறியாமையால் அல்லாஹ்வை திட்டக்கூடும் என்ற இறைவசனத்தை அறியாதவன் அல்ல நான்.

      நீக்கு
    2. கிறிஸ்துவையும், யூதகடவுளையும் திட்டி கணக்கை நேர் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்காகவே அந்த மதங்களை குறிப்பிட்டேன்.

      நீக்கு
  7. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
    அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்...

    பதிலளிநீக்கு
  8. your statementis correct,but it is not fair to muslims to set fire on public's vehicle in the name of protest

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர்க்களத்தில் கூட இஸ்லாம் சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அதை மீறி யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே

      நீக்கு
  9. போராட்டம் உங்கள் உங்கள் உரிமை. ஆனால் அதற்காக இன்னொரு உயிரை கொல்வதை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும். வேண்டும் என்றால் தூதரங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள், கொடிகளை எரியுங்கள், கோசங்களை எழுப்புங்கள், யார் குறை சொல்ல முடியும். ஆனால் நடந்தது என்ன? கொலை அதுவும் ஆணை ஆணே பாலியல் வல்லுறவு செய்து படு கொலை. நல்ல போராட்டம். அதுக்கு நல்ல வக்காலத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போராட்டம் மட்டுமே இங்கு வக்காலத்து வாங்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த வன்முறைகளுக்கு அல்ல... முந்தைய பின்னூட்டத்திற்கான என் பதிலை படிக்கவும்.

      நீக்கு
    2. @Ethicalist E
      எந்த இஸ்லாமிய பதிவராவது நடந்த வன்முறைகளை ஆதரித்து பதிவு போட்டார்கள் என்ற கூற முடியுமா இதனை பற்றி எழுதிய அத்தனை இஸ்லாமிய பதிவர்களும் நடந்த வன்முறைகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளார்கள். யாராவது ஒருவர் வன்முறைகளை ஆதரித்து உள்ளார் என்று ஒரு பதிவை உங்களுக்கு காட்ட முடியுமா? இது தான் உங்கள் போன்றோர்களின் பிரச்சினை பதிவில் என்ன இருக்குது என்று அறிந்து கொள்ளும் முன் உங்கள இஸ்லாமிய வெறுப்புணர்வை காட்ட வேண்டியது .

      நீக்கு
    3. @Farhan

      இஸ்லாமிய பதிவர்களின் அனேகர் தூதரக தாக்குதலை எதிர்த்து பதிவு போட்டார்கள்... ஆனால் இஸ்லாமிய எதிர் பதிவர்கள் யாரும் படத்தை எதிர்த்து பதிவு போடவில்லை....

      போட்டது எல்லாம் நடுநிலை பேணும் எனது அருமை அண்ணன் கேபிள் சங்கரும், நண்பர் சிவாவும் மற்றும் நண்பேன்டாவும் தான்... கோவி கண்ணன், இக்பால் செல்வன், தருமி, கருமி, வவ்வாலு, சார்வாகன் வகையறா யாராவது படத்துக்கு எதிரா பதிவிட்டிருந்தால் நடுநிலையை மெச்சி இருக்கலாம்.... ஹூம் என்ன செய்வது?? அப்படி ஒன்று இருந்தால் தானே???

      முஸ்லிம்களை தாக்குவது இவர்கள் கண்ணுக்கு தெரியாது...அதற்க்கு புரியும் எதிர்வினை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்... வாழ்க உங்கள் நேர்மை...

      நீக்கு
    4. Ethicalist E
      //ஆணை ஆணே பாலியல் வல்லுறவு செய்து படு கொலை.//
      கொலை நடந்தாது அனைவரும் அறிந்தாது. நீங்கள் சொல்லுவது புது படமா இருக்கிறாது. எந்த செய்திதழில் வந்தாது லீங்க்கு கொடுங்கள்.அப்படியே ஒருவேலை நடந்திருந்தால் எங்கள் சமுதயத்தில் இக்பால் செல்வன் போன்ற கூமூட்டை ஒழிந்திஇருக்கிறார்கள். இவர்களை சௌதி அரசங்காம் தண்டனை தாருவது போல் கல்லால் அடித்தே கொல்லப்படவேண்டியாவர்கள்.

      நீக்கு
    5. /// போட்டது எல்லாம் நடுநிலை பேணும் எனது அருமை அண்ணன் கேபிள் சங்கரும், நண்பர் சிவாவும் மற்றும் நண்பேன்டாவும் தான்... கோவி கண்ணன், இக்பால் செல்வன், தருமி, கருமி, வவ்வாலு, சார்வாகன் வகையறா யாராவது படத்துக்கு எதிரா பதிவிட்டிருந்தால் நடுநிலையை மெச்சி இருக்கலாம்.... ஹூம் என்ன செய்வது?? அப்படி ஒன்று இருந்தால் தானே??? ////
      ஒரு புத்திசாலி யூ டுபுக்கு நன்றி சொல்லி பதிவிட்டது. அதையும் சில புத்திசாலிகள் வரவேற்றன என்ன நடுநிலமைவாதிகள் புல்லரிக்கின்றது ??????

      செய்யது
      துபாய்

      நீக்கு
    6. http://www.inquisitr.com/330504/ambassador-stevens-was-raped-before-his-murder-reports-claim/

      http://www.tayyar.org/Tayyar/News/PoliticalNews/ar-LB/usa-killed-lybia-zek-970.htm#

      நீக்கு
    7. உங்களுடைய முதல் லிங்க் பக்கத்தை பாதி படிச்சாலே போதும்.. அது "எந்த மாதிரியான சைட்" என்று அதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறுது..! லிபியாவில் நடந்ததை லெபனானில் இருந்து சொல்றங்களாம்..! ஹா...ஹா...ஹா... செமை காமடி..!

      இரண்டாவது லிங்க்... அது அரபியில் உள்ளது. அதுதான் அந்த முதல் லிங்க்கிற்கு சோர்ஸ் போல..! இதுக்குநான் தந்த ரெண்டாவது & மூணாவது லிங்கில் பதில் உள்ளது.

      நீக்கு
  10. //இஸ்லாமியர்கள் அப்படி செய்வதென்பது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல.....ஏனென்றால், யூதர்கள் கடவுளாக நினைக்கும் மோசஸை நபி மூசா(அலை) என்றும், கிறிஸ்துவர்கள் கடவுளாக நினைக்கும் ஜீசஸை நபி ஈசா(அலை) என்றும் (இறைதூதர்களாக) பார்ப்பவர்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் அப்படி செய்ய நினைப்பதே பாவம். சில யூத கிறிஸ்துவர்களின் பலமும் இஸ்லாமியர்களின் பலவீனமும் அதுதான்//.

    முற்றிலும் உண்மை சகோ

    கடந்த வாரங்களில் சமூகத்திலும் வலைத் தளங்களிலும் நிகழ்வுகள்
    அதிகமான மன உளைச்சலை உண்டாக்கி விட்டது

    பதிலளிநீக்கு
  11. யாரும் போராட்டமே தவறு என்று இஸ்லாமியர்களை குறை சொல்லவில்லை. அப்படி குறை சொன்னால் அது தவறானது. போராட்டத்தில் இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட முறைதான் தவறானது. நீங்கள் கூறலாம் அவர்கள் இஸ்லாமை புரிந்து கொள்ளாதவர்கள் என்று. மற்றவர்கள் விமர்சம் செய்வது அந்த புரிந்து கொள்ளாதவர்களைத்தான். சென்னை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தூதரம் மீது கல் வீசப்பட்டது. (நான் பார்த்தேன்) பதிவர் சுவன பிரியன் சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்றது என்று பதிவிடுகின்றார். நாம் நடந்த கல் வீச்சு பற்றி குறிப்பிட்ட போது அது வேறு இஸ்லாமிய குழு என்று காரணம் கூறுகிறார். இஸ்லாமிலும் பல அரசியல் குழுக்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இடம் மாறி வந்துவிட்டது. சகோ.சுவனப்பிரியன்தான் பதில் சொல்லனும்.

      நீக்கு
  12. அடக்குமுறைகளுக்கு எதிராய் குரல் கொடுப்பார்கள். அப்படி குரல் கொடுப்பவர்கள் மாற்று மதத்தினராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர் போராளி.... அவர்களே இஸ்லாமியர்களாக இருந்துவிட்டால் அவர்களின் பெயர் தீவிரவாதி. நல்லாருக்குடா உங்க நியாயம்?
    அதானே

    பதிலளிநீக்கு

  13. //ஒரு பதிவு எழுதினாலே அதற்கு எதிர்பதிவு எழுத ஓராயிறம் பேர் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு படத்தை எடுத்தவனுக்கு எதிராக ஏதும் போராட்டம் செய்யக்கூடாதாம். அடப்போங்கப்பா.....//

    ம்ம்... அதானே ... செம :-)

    பதிலளிநீக்கு
  14. மன்னிக்க மீண்டும் பின்னூட்டங்களை நான் முதல் படிக்கவில்லை. பதிவை மட்டுமே படித்தேன். அந்த திரைப்படத்தை எந்த மனித ஜாதியும் ஏற்று கொள்ளாது. ஆனால் அதுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் தன்மை அந்த படத்திற்கு எதிரான மாற்று மதத்தினரின் விமர்சனகளை (எதிர்ப்பை) குறைத்துள்ளது. இதில் வெற்றி பெற்றது அந்த ஜூத இயக்குனனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கொலை அதுவும் ஆணை ஆணே பாலியல் வல்லுறவு செய்து படு கொலை. ///

      ---இதை எப்படி சொல்கிறீர்கள்...?
      ஆதாரம் எங்கே..?
      எந்த செய்தி தளத்தில் படித்தீர்கள்..?
      எதோ நேரில் பார்த்தது போல எழுதுகிறீர்கள்..?

      இதுபோல பொய் சொன்னால்.. உங்களுக்கும் பொய் சொல்லி நாலாந்தர ஆபாச படம் எடுத்த அந்த கயவன் கிரிமினல் பாசிலி நகுலாவுக்கும் என்ன வித்தியாசம்..???

      நீக்கு
    2. http://www.inquisitr.com/330504/ambassador-stevens-was-raped-before-his-murder-reports-claim/

      http://www.tayyar.org/Tayyar/News/PoliticalNews/ar-LB/usa-killed-lybia-zek-970.htm#

      நீக்கு
    3. http://www.bbc.co.uk/news/world-middle-east-19605322
      இது பிபிசி நியூஸ்... இது பொய்யா...?
      http://www.huffingtonpost.com/2012/09/17/christopher-stevens-death_n_1890322.html
      இது நேரடி சாட்சிகள் சொன்ன ரிப்போர்ட்..!

      நீக்கு
    4. இதையும் படித்தால்... உண்மை விளங்கும்..!
      http://thenewcivilrightsmovement.com/bryan-fischers-tall-tale-about-chris-stevens-death-disproved/news/2012/09/19/49242

      அந்த ஹரிபரியிலே இவ்ளோ பெரிய மேட்டர் எல்லாம் அங்கே தீ ஜுவாலை புகைக்கு நடுவே நடந்து இருக்குமா... என்று யோசிக்கணும்...

      அதை விட்டுட்டு...
      கருப்பு கொக்கு பறந்துச்சுன்னு ஒருத்தர் சொன்னா...
      அது வெள்ளைக்காக்காவுக்கு மூணு கொம்பு மொளைச்ச மீனை கவ்விக்க தந்துச்சுன்னு எல்லாம் டைப் அடிக்க கூடாது.....!

      கொஞ்சமாச்சும் பகுத்தறிவு வேணாம்...?

      நீக்கு
    5. பெயரில்லா20 செப்., 2012, 9:02:00 PM

      அந்த இயக்குநர் யூதர் இல்லை ... சகோ.. காப்டிக் கிருத்தவர் எகிப்திய வம்சாவளி ! உண்மையை சொன்னாலும் யூததுவேசம் மறைத்துவிடுகின்றது அதனை

      நீக்கு
  15. சபாஷ்...சரியான பதிவுண்ணே .........

    பதிலளிநீக்கு
  16. சிறந்த பதிவு!

    //சென்னை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தூதரம் மீது கல் வீசப்பட்டது. (நான் பார்த்தேன்) பதிவர் சுவன பிரியன் சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்றது என்று பதிவிடுகின்றார். நாம் நடந்த கல் வீச்சு பற்றி குறிப்பிட்ட போது அது வேறு இஸ்லாமிய குழு என்று காரணம் கூறுகிறார். இஸ்லாமிலும் பல அரசியல் குழுக்களா?//

    தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு பண்ணிய போராட்ட காட்சிகளையே படங்களாக கொடுத்திருந்தேன். அது அல்லாமல் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ வேறு இயக்கத்தினரின் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததாக செய்தியில் பார்த்தேன். இதனை வன்மையாக வண்டிக்கவும் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு படிக்கும் போது என் உணர்வுகளை வெளிப்படுவது போல் இருந்தாது. நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் கஸாலி சார்!எதிர்காலம் மதப்போர் நிறைந்ததாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள்.அமெரிக்கர்கள் எதை விற்றும் காசு பார்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்!கண்டனத்துக்கு உரிய திரைப் படம் தான் அது!இப்போதெல்லாம் யார் தான் மற்றைய மதத்தினரை மதிக்கிறார்கள்?ஹும்!

    பதிலளிநீக்கு
  19. அமெரிக்கர்கள் மீதான எதிர்ப்பைக்காட்ட இலகு வழிகள்

    1. அமேரிக்க MNC வேலைகளை உதறித்தள்ளலாம்
    2.ESPNSTAR மற்றும் இன்னபிற அமெரிச்ச சானல்களை டீவீயில் பார்ப்பதை தவிற்க்கலாம்
    3. அமெரிக்க Made மின்சாதனங்களை தவிர்க்கலாம்
    4. KFC McDonalds பக்கம் தலைவைத்து கூட படுக்காமலிருக்கலாம்
    5. Facebook blogger gmail போன்ற சேவைகளை உபயோகப்படுத்துவதை தவிற்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா20 செப்., 2012, 8:56:00 PM

      சகோ. உங்களின் கருத்தை வழிமொழிகின்றேன் ... அமெரிக்காவை எதிர்க்க நினைப்பவர்கள், அவன் தரும் சர்வ சுகங்களை உதறித் தள்ள முடிவதில்லை .. !!! மாறாக தூதரகங்களை மட்டும் அடித்து நொறுக்குவார்கள் !!! கொல்வார்கள் !! கற்பழிப்பார்கள் !!! ஐயகோ !!!

      நீக்கு
    2. தூதர் கற்பழிக்க பட்டார் என்று திரும்ப திரும்ப வாந்தி எடுக்கும் இக்பால் செல்வனே ... உம்மை விட இஸ்லாத்தை ,இஸ்லாமியர்களை சொறிந்த்து சொறிந்தே ஈன பிழைப்பு நடத்தும் தினமலம் போன்ற பத்திரிக்கைகளுக்கு கூட கிடைக்காத செய்தி உனக்கு மட்டும் கிடைச்சுதா? முச்ளிம்களியே எதிரத்து பதிவு போடும் நீ ஏன் உன் பெயரில் இக்பால் என்பதை உதறி தள்ள வில்லை ?

      நீக்கு
  20. அப்புறமா இந்து மக்கள் கட்சிக்கும் எந்த ஒரு உண்மையான இந்துவுக்கும் துளி கூட தொடர்பில்லை என்பதை அறிக

    அவர்கள் பண்ணுவது எல்லாம் போராட்டம் கிடையாது...... அவர்கள் உலக மகா காமெடியன்கள் என் வீட்டு நாய் கூட அவர்களை மதிக்காது

    பதிலளிநீக்கு
  21. சலாம் சகோ.கஸாலி,
    அருமையான 'நச்' பதிலடி.
    பிரச்சினை என்னவென்றால்...
    முஸ்லிம்கள் லிபிய தூதரக அட்டாக்கை உயிரிழப்பை எல்லா முஸ்லீம் நாடுகளும் கண்டிக்கவேண்டும். சொல்லாமலே தானாகவே கண்டித்தன.
    ஆனால், அதற்கு காரணமானவனை அதை விளம்பரப்படுத்தியவனை எந்த யூத கிருஸ்துவ நாடும் கண்டிக்க காணோம். மாறாக பலத்த பாதுகாப்பு.

    கேட்டால்... அமெரிக்காவில்-ஐரோப்பாவில் 'கருத்து சுதந்திரம்...' மண்ணாங்கட்டி.. பொடலங்கா..! அப்புறம் எதுக்குடா விக்கிலீக்சை தடை பண்ணி ஜூலியன் அசாஞ்சேவை உள்ளே வச்சீங்க..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா20 செப்., 2012, 9:00:00 PM

      உங்களின் அறிவு நெஞ்சை நக்குகின்றன !!! விக்கிலீக்ஸ் என்பது தேசத் துரோகம் சகோ.. ஒரு நாட்டின் ரகசியங்களை வெளியிட்டால் எந்த நாடும் சும்மா இருக்காது !!!

      திருச்சியில் அன்சாரி என்பவர் ஏன் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்க முற்பட்டதனாலேயே !!!

      கருத்துச் சுதந்திரம் - தேச துரோக சட்டங்களுக்கு உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை ..

      அடுத்து ஜூலியன் அசாஞ்சே உள்ளே இருப்பது வேறு வழக்கில் !!! அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஈக்குவாடார் இடதுசாரி நாடு என்பதால், எல்லாம் அரசியல் விளையாட்டு தான்..

      என்னக் கொடுமை என்றால் இந்த மொக்கைப் படத்துக்கு சௌதியில் இருந்து ஒரு போராட்டத்தையும் காணவில்லையே ! நட்பு தடுக்கின்றதோ ?

      :)

      நீக்கு
    2. அவதூறும், அசிங்கமும், ஆபாசமும், பொய்யும்... அமெரிக்காவுக்கு கருத்து சுதந்திரம் என்றால்...

      மனித குலத்தை அழிக்கும் அரச பயங்கரவாதியின் மெய்யான வண்டவாளத்தை இணைய தண்டவாளத்தில் அழகிய முறையில் ஏற்றிய investigative journalism என்ற கருத்து சுதந்திரம் மட்டும் தப்பா..?

      நாளைக்கு ஜப்பானில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட போறான் என்ற அமெரிக்க ராணுவ ரகசியத்தை இன்று ஒரு கிக்கிலீக்ஸ் வெளியிட்டால்.......... அது தப்பா..? சரியா..?

      நீக்கு
    3. ///என்னக் கொடுமை என்றால் இந்த மொக்கைப் படத்துக்கு சௌதியில் இருந்து ஒரு போராட்டத்தையும் காணவில்லையே ! நட்பு தடுக்கின்றதோ ?///

      போராட்டம் நடந்தாலும் 'எதுக்குடா இந்த மொக்கை படத்துக்கு எல்லாம் போராட்டம் பண்றீங்க'ன்னு ஆயிரம் நொள்ளை என்று கமென்ட்..!

      எங்காவது போராட்டம் நடக்காவிட்டாலும் 'எதுக்குடா அந்த மிகச்சிறந்த காப்பியத்துக்கு எதிரா போராட்டம் நடத்தலை'ன்னு ஒரு கேள்வி..?

      ----இதுதான் நேர்மையாளன் வேஷம் போடும் உங்களின் பட்டவர்த்தமான பிழைப்புவாதம் அப்பட்டமாக வெளிப்படும் ச்சீப்பான இடம்..!

      நீக்கு
    4. பெயரில்லா21 செப்., 2012, 4:22:00 AM

      அவதூறு, அசிங்கம் யாருக்கு ? ஒரு நாட்டில் ஒரு சாதரண குடிமகன் எடுக்கும் ஒரு படத்தை உலகில் எங்கோ இருக்கும் நீங்கள் எதிர்ப்பது என்னய்யா காமடி .. அப்படத்தில் முழுதும் கூறப்பட்டது அவதூறு என்று சொல்லிவிட முடியாது, பலக் காட்சிகள் ஹடித்களில் இடம்பெற்றவையே..

      // Narrated Aisha, Ummul Mu'minin:
      One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
      (Abu Dawud 0270)

      (நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா கூறுகிறார்: நான் மாதவிலக்காக இருந்த ஒரு இரவில் அவர்(முஹம்மது) என்னிடம் வந்தார். தொழுகைக்கென்று அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு, தனது தொழுகைக்காக சென்றார். நான் மிகநன்றாக உறங்கும்வரை அவர் வரவேயில்லை சளியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், ”என் அருகில் வா” என்று என்னிடம் கூறினார், “நான் மாதவிலக்காக இருக்கிறேன்” என்று நான் கூறினேன். அவர், உன் தொடைகளை திறந்து வை என்றார். எனவே நான் எனது இரு தொடைகளையும் திறந்து வைத்தேன். பிறகு அவர் தனது நெஞ்சத்தையும் கன்னத்தையும் எனது தொடைகளில் வைத்தார். அவர் உடல்சூடேறி உறங்கும் வரை அப்படியே வைத்திருந்தேன்.) //

      இதேக் காட்சி தான் அப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்று இருந்தது ... !!!

      நீங்கள் சொல்வது சரி !!! ஹிஹி !!! எங்களுக்கு குரான் என்றால் என்னவென்றே தெரியாது இமாம்கள் சொல்வதை மட்டுமே கேட்போம் .. அவர் கிணற்றில் குதி என்றாலும் குதித்துவிடுவோம் .. ஹிஹி !!!

      நீக்கு
    5. பெயரில்லா21 செப்., 2012, 4:28:00 AM

      // மனித குலத்தை அழிக்கும் அரச பயங்கரவாதியின் மெய்யான வண்டவாளத்தை இணைய தண்டவாளத்தில் அழகிய முறையில் ஏற்றிய investigative journalism என்ற கருத்து சுதந்திரம் மட்டும் தப்பா..? //

      தப்பே கிடையாது சகோ. எதுவும் அம்பலத்தில் வரவேண்டும் என்பதே எனது அவா !!!

      ஆனால் அம்பலத்தில் முகம்மதுவின் வாழ்வும் வந்துவிட்டதால் தான் கொதிக்கின்றீர்கள் ... !!!

      அசாஞ்சே அமெரிக்காவின் பார்வையில், அமெரிக்க சட்டத்தின் படி மற்றுமே குற்றவாளி, ஆனால் அவர் மீது இருக்கும் வழக்கோ வேறு வழக்கு சகோ ... !!! இதில் உள்ளரசியல் இருக்கலாம் இல்லை என சொல்லவில்லை ..!!!

      அடுத்து முகம்மதுவுக்கு வருவோம், முகம்மது புனிதமானவர் என்பது இஸ்லாமிய நாடுகளில் மட்டும் தான். இஸ்லாமியர் அல்லாதோருக்கு அவர் ஒருக் கதாப்பாத்திரம் அவ்வளவே.. அவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிப்பத்து அந்த நாட்டு சட்டப்பட்டி அந்தந்த நாட்டு மக்களின் உரிமை.. அமெரிக்காவில் இருக்கும் இரண்டு மில்லியன் முஸ்லிம்களே ஒன்றையும் சொல்லக் காணோம். வேண்டும் என்றால் வழக்குத் தொடுத்து சட்ட மேடையில் சந்திக்கட்டும். அதைவிட்டுவிட்டு கோழைத்தனமாக தூதர்களை அடித்துக் கொல்வது என்ன வகையில் அழகு சொல்லுங்கள் ..

      நீக்கு
    6. பெயரில்லா21 செப்., 2012, 4:30:00 AM

      //போராட்டம் நடந்தாலும் 'எதுக்குடா இந்த மொக்கை படத்துக்கு எல்லாம் போராட்டம் பண்றீங்க'ன்னு ஆயிரம் நொள்ளை என்று கமென்ட்..!

      எங்காவது போராட்டம் நடக்காவிட்டாலும் 'எதுக்குடா அந்த மிகச்சிறந்த காப்பியத்துக்கு எதிரா போராட்டம் நடத்தலை'ன்னு ஒரு கேள்வி..?
      //

      உங்கள் புனித நாட்டின் நேர்மை தான் கிழிந்து தொங்குகின்றது .. ஏனைய இஸ்லாமிய நாட்டில் உள்ள பலரையும் உசுப்பிவிட்டு விட்டு, தனது நாட்டில் மட்டும் கமுக்கமாக உட்கார்ந்துக் கொண்டது போலும், சௌதியின் கமுக்கமே இப்போராட்டங்கள் உணர்வுப் பூர்வமானவை என்பதையும் தாண்டி, அரசியல் பூர்வமானவை என்பதைக் காட்டிவிட்டது ... !!!

      நீக்கு
  22. பெயரில்லா20 செப்., 2012, 8:54:00 PM

    உங்களின் மதாபிமானமும், கோபமும் நியாயமானவை என்றாலும் சில திருத்தங்கள் ... !

    '' முஸ்லிம்களின் அப்பாவித் தனங்கள் '' என்ற இப்படத்துக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமில்லை சகோ. இதன் பின்னணியில் இருந்தது எகிப்திய காப்டிக் கிருத்தவர்கள் மற்றும் எவாஞ்சிஸ் கிருத்தவ அமைப்புக்கள் ... !!!

    அடுத்து போராடவோ, எதிர்ப்புக் காட்டவோ கூடாது என்று எவரும் சொல்லவில்லை, மாறாக போராடுவதில் மனித தன்மையோடு போராடுங்கள் என்று தான் சொல்கின்றோம் .. எவனோ ஒருவன் எடுத்தப் படத்துக்காக அவன் வாழும் நாட்டு தூதரகங்களை அடித்து நொறுக்குவதும், தூதர்களை கற்பழித்துக் கொல்வதும் தானா போராட்டக் குணம் சொல்லுங்கள் ... !!! வேறு எந்த மதத்தினரும் வன்முறையை இப்படிப்பட்ட விடயங்களுக்காக இவ்வளவு தூரம் கையில் எடுத்தது இல்லை எனலாம் .. !!!

    முஸ்லிம்களின் ஒரு குறிபிட்ட பிரிவினர் தான் இவற்றை செய்தார்கள் என்று சொல்வது சரிதான், ஆனால் அப்பிரிவினர் செய்த வன்முறைகளை தடுக்கவோ, கண்டிக்கவோ யாரும் முன்வராமல் இருப்பதும் வேதனையான உண்மை சகோ..

    அது போக, இன்னொரு விளக்கம் - இஸ்லாமியர் அதிகமுள்ள நாடுகளில் பிற மத விக்கிரகங்கள் வைக்கவே தடை உள்ளது. ஏன் ? அந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர், சட்டம் அப்படி இருக்கு !

    அதே போல மதச்சார்ப்பற்றோர் அதிகம் வாழும் நாடுகளில் அவர்களுக்கான கருத்துச் சுதந்திரமும், கலை வெளிப்பாட்டு தன்மையும் இருக்கின்றது, அதனை அந்த நாட்டுக்கு வெளியே இருந்து போராடி தடுக்க நினைப்பது முட்டாள் தனம் ..

    எனக்கு இத்திரைப்படத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், அதற்கு காட்டிய போராட்ட விதங்களிலும் உடன்பாடு இல்லை .. !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ இக்பால் செல்வன்...

      // தூதர்களை கற்பழித்துக் கொல்வதும் தானா போராட்டக் குணம் சொல்லுங்கள் ... //

      இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் தான் சொல்கிறீர்கள். எந்த தூதர் கற்பழித்து கொல்லப்பட்டார் என்று கூற முடியுமா??? ஏனெனில் இது கேள்விபடாத புது தகவலாக இருக்கிறது

      நீக்கு
    2. ////முஸ்லிம்களின் ஒரு குறிபிட்ட பிரிவினர் தான் இவற்றை செய்தார்கள் என்று சொல்வது சரிதான், ஆனால் அப்பிரிவினர் செய்த வன்முறைகளை தடுக்கவோ, கண்டிக்கவோ யாரும் முன்வராமல் இருப்பதும் வேதனையான உண்மை சகோ..////

      -----உலகில் எந்த முஸ்லிமும் கண்டிக்க வில்லையாம்..! தடுக்கவில்லையாம்..! தொடர்ந்து பச்சை பொய்களை வெட்கம் இல்லாமல் போகும் இடமெல்லாம் சொல்லிக்கொண்டே போக, எந்த அறத்துக்கும் மசியாத ஒரு மரத்துப்போன மனம் இருந்தால் மட்டுமே முடியும்..! ச்சே..! பொய்யர்களை கண்டாலே வெறுப்பாக உள்ளது..!

      //எனக்கு இத்திரைப்படத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், அதற்கு காட்டிய போராட்ட விதங்களிலும் உடன்பாடு இல்லை .. !!!///

      ----பின்னதுக்கு தண்டிக்க எல்லா நாட்டிலும் சட்டம் இருக்கு..! ஆனால்... முன்னதுக்கு..? இவ்வளவு வெட்டி ஞாயம் வீராப்பு பேசும் பொய்யர்கள்... இதுபோன்ற நாலந்தர கயவர்கள் இனி படம் எடுக்காமல் இருக்க என்ன சட்டம் போட்டீர்கள்..? எடுத்து வெளியிட்டால் அதற்கு என்ன தண்டனை போட்டீர்கள்..?

      எந்த ஒரு யூத கிருஸ்துவ நாடாவது இந்த படத்தை கண்டித்து செய்தி இருந்தால் அதை இங்கே பதியவும்..! அடுத்து... இந்த திரைப்படத்தில் உடன்பாடு இல்லை என்றால்.. அதை கண்டித்து நீங்கள் வெளியிட்ட பதிவின் லிங்க் ஏதும் இருந்தால் இங்கே இடவும்..!

      உண்மையும் நேர்மையும் நீதியும் நியாமும் ஒருவழிப்பாதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றால்... அப்படி எதிர்பாத்தால்... எல்லாருக்கும் அழிவுதான்..!

      நீக்கு
    3. // முஸ்லிம்களின் ஒரு குறிபிட்ட பிரிவினர் தான் இவற்றை செய்தார்கள் என்று சொல்வது சரிதான், ஆனால் அப்பிரிவினர் செய்த வன்முறைகளை தடுக்கவோ, கண்டிக்கவோ யாரும் முன்வராமல் இருப்பதும் வேதனையான உண்மை சகோ.. //

      நீங்க கண்ண மூடி இருந்தா உலகம் இருண்டு விடுமா சகோ????

      எனக்கு தெரிந்த பதிவர்களே ஒரு 5 பதிவு போட்டு இருக்காங்க வன்முறைய கண்டிச்சு. உண்மை நிலை அப்படி இருக்கையில் யாரும் கண்டிக்கல கண்டிக்கலன்னு ஏன் கத்துறீங்கன்னு புரியல??? முழு பூசணியய் சோற்றில் மறைக்கும் முயற்ச்சியா???

      படத்த கண்டிச்சு உங்க குரூப்ல யார் பதிவு போட்டா????? முஸ்லிம்கள் மேல் உள்ள் வெறுப்பு தானே உங்கள அது போல் ஒரு பதிவு போடாம தடுக்குது??? நேர்மையா ஒரு பதிவ போட்டு இருக்க வேண்டியது தானே??? அத செஞ்சுட்டு வந்து கண்டிச்சிருந்தா ரொம்ப சந்தோஷப் படலாம்....

      நீக்கு
    4. நடந்த வன்முறையை கண்டித்து எழுதப்பட்ட மதவெறி பிடித்த, மாற்று மதத்தினரை கொல்லத் துடிக்கிற, இந்தியாவிற்க்கு எதிரான, பாகிஸ்தானுக்கு ஆதரவான நபர்களின் கட்டுரைகளில் என் கண்ணில் பட்டவை மட்டும்...

      http://pinnoottavaathi.blogspot.com/2012/09/blog-post_13.html

      http://biriyaani.blogspot.in/2012/09/blog-post.html

      http://mydeartamilnadu.blogspot.in/2012/09/blog-post_17.html

      http://www.penkural.com/2012/09/blog-post.html

      http://suvanappiriyan.blogspot.in/2012/09/blog-post_16.html

      உங்க குரூப்ல படத்தை கண்டித்து யார் பதிவு போட்டா??? லிங்க் தர முடியுமா??? உங்கள் நேர்மையை நிரூபிக்க முடியுமா????

      நீக்கு
    5. //உங்க குரூப்ல//----வெறும் குரூப் இல்லை சகோ.சிராஜ்.
      நேர்மையான நடுநிலையான கொம்பு முளைத்த குரூப்..! இன்னொரு பேரு இஸ்லாமோஃபோபியா குரூப். இந்தியாவின் அமெரிக்க தூதர் கொல்லப்படவில்லையே... அதை வைத்து இருபது இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போட்டு கல்லா கட்ட முடியாமல் போச்சே.. என்ற கவலையில் உள்ளார்கள்..! அந்தோ பரிதாபம்..!

      நீக்கு
    6. பெயரில்லா21 செப்., 2012, 4:39:00 AM

      @ சிராஜ் இவ்வளவு அப்பாவியே இருக்கின்றீர்களே. ஒரு விடயத்தைப் பற்றி தெளிவாக்கிக் கொள்ளாமலா நாம் கூறுவோம்.

      லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டபர் ஸ்டீவன்ஸ் கடந்த செப்டம்பர் 11 ( முக்கிய தினம் ) அன்று இஸ்லாமிய காடையர்களால் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்செய்தியை முதலில் வெளியிட்டது தய்யார் என்னும் லெபனானிய செய்தி நிறுவனம் ..

      http://www.tayyar.org/tayyar

      இதுக் குறித்து சுமார் 13 லட்சத்தி 80 ஆயிரம் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளன ... சகோ ..

      இதில் நல்ல செய்தியே .. சில லிபிய முஸ்லிம்கள் அவரை காப்பற்றவும் முனைந்துள்ளார்கள், இருந்த போதும் ஓங்கியது தீவிரவாத முஸ்லிம்களின் கைகள் தான் .. !!!

      http://goo.gl/mbHTN

      http://goo.gl/Izv9u

      நீக்கு
    7. பெயரில்லா21 செப்., 2012, 4:46:00 AM

      @ சிராஜ் சேலைக்கும் வலிக்காமல் முள்ளுக்கும் நோகாமல் நீங்கள் செய்த கண்டனங்கள் பற்றி யாம் அறிவோம். யாம் கேட்டது அதிகாரப் பூர்வமாக இஸ்லாமிய மதத் தலைவர்கள், மத நாடுகளின் கண்டங்களை சகோ.. உங்களில் சிலர் எழுதியா நோஞ்சான் கண்டனங்களை அல்ல .. !!!

      // படத்த கண்டிச்சு உங்க குரூப்ல யார் பதிவு போட்டா????? முஸ்லிம்கள் மேல் உள்ள் வெறுப்பு தானே உங்கள அது போல் ஒரு பதிவு போடாம தடுக்குது??? நேர்மையா ஒரு பதிவ போட்டு இருக்க வேண்டியது தானே??? அத செஞ்சுட்டு வந்து கண்டிச்சிருந்தா ரொம்ப சந்தோஷப் படலாம்.... //

      என்னது எங்க குரூப்பா ? ஹிஹி !!! எங்களுக்கு என்னப்பா குரூப் .. எனக்கு ஒ பாசிட்டிவ் குரூப் அது மட்டும் தான் தெரியும் சகோ... !!! உங்களைப் போல நானும் எதோ வரகாப்பி குரூப்பில் இருப்பதாக கருதுகின்றீர்களா.. எனது குரூப் என்றால் அதில் நான் மட்டுமே உள்ளேன்.

      முதலில் படத்தைக் கண்டிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லவே இல்லை. ஏனெனில் அப்படம் எதோ ஒரு நாட்டில் எவனோ ஒருவன் எடுத்தது, அவ்வளவு தான் !!!

      ஆனால் அந்த படம் இரசிக்கும் தன்மையில் இல்லை, மொக்கையாகவும், அசிங்கமகாவும், கிண்டல்களை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு படம் எனவும், அவற்றை நாம் புறக்கணிப்பது தான் சரியான ஒன்று என எனது பதிவில் ஏற்கனவே எழுதிவிட்டேன்..

      http://goo.gl/63v85

      நீக்கு
  23. நீங்கள் தமிழ் திராவிட இயக்கத்தை பற்றி நிறைய எழுதி வருவதை நான் தொடர்ந்து படித்து வருபவன் உங்களை ஒரு முஸ்லிம் அபிமானி என்று என்னால் இதுவரை எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போது நீங்கள் எழுதி இருப்பது உங்கள் நடுநிலைமைக்கு விடப்படுள்ள ஒரு மிக பெரிய சவால். யாருமே தங்கள் மதம் என்று வரும் போது உண்மையான முகத்தை காட்டுவார்கள்.. நீங்கள் கொஞ்சம் தாமதித்து இதை எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.. மதம் என்று வந்து விட்டாலே பல சுவர்கள் நம்மை பிரிக்க உடனே வந்து விடும்.. எனவே மதத்தை ஒரு ஓரமாக வைத்து விடுவது உங்களை போன்ற முஸ்லிம்களுக்கு நல்லது. இதையும் நீங்கள் ஒருவிதத்தில் தவறாக புரிந்துகொண்டால் இழப்பு உங்களைபோன்ற மிதவாத முஸ்லிம்களுக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கும்தான்...மதத்துக்காக நீங்கள் நிறைய செய்கிறீர்கள்..ஆனால் நீங்கள் வாழும் சமூகத்துக்காக என்ன செய்கிறீர்கள் என்பதே என் கேள்வி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அரசியல் பதிவுகளை அதிகமதிகம் எழுதி வருவதால் நான் முஸ்லிம் இல்லை என்றாகிவிடுமா நண்பரே... அதேநேரம் ஒரு முஸ்லிம் பதிவரால் நடுநிலையுடன் எழுத முடியாது என்று நினைக்கிறீர்களா? நான் சார்ந்திருக்கும் இஸ்லாம் தொடர்பில் ஒரு பிரச்சினை என்றதும் நடுநிலையுடன் ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதற்கு முன்பு கூட ஜெயாவின் கார்ட்டூனை சிங்களன் ஒருவன் வரைந்தபோது கூட எதிர்ப்பு கட்டுரை எழுதியிருக்கேன். ஜெ என்ன இஸ்லாமா? விமர்சனமோ எதிர்ப்போ வரம்பிற்கு உட்பட்டு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். அதற்காக இஸ்லாமை ஓரமாக வைத்துவிட்டு நீ எழுதினால்தான் படிப்பேன் என்று சொல்வதெல்லாம் அபத்தம். ஒரு கட்டுரை வருகிறதென்றால் அந்தக்கட்டுரையின் கருத்தை மட்டும் பாருங்கள். அந்தக்கருத்தோடு விவாதியுங்கள். அதை விடுத்து எழுதியவன் எந்த மதம் என்று பார்க்காதீர்கள். இன்னொரு முக்கியமான விஷயம், பதிவில் எழுதுவதை ஒரு பொழுது போக்காகத்தான் செய்து வருகிறேன். எப்போது தேவையில்லை என்று படுகிறதோ அப்போது எழுதுவதை நிறுத்தி விடுவேன். அதனால் ஒரு நட்டமும் கிடையாது எனக்கு.

      நீக்கு
    2. சகோ காரிகன்,

      // ஆனால் தற்போது நீங்கள் எழுதி இருப்பது உங்கள் நடுநிலைமைக்கு விடப்படுள்ள ஒரு மிக பெரிய சவால். //

      இஸ்லாத்த தவிர வேறு எத பத்தி எழுதினாலும் அது நடுநிலை.... இஸ்லாத்த பத்தி எழுதினா ஒடனே நடுநிலை தவறிட்டார்.. அப்படிதானே????

      இது தான் சார் இருக்கதிலே சூப்பர் நடுநிலை....அப்டியே நடுநிலையாவே இருங்க...வெளங்கிடும்....

      நீக்கு
    3. பொதுவான பதிவுகள், அரசியல் ஒப்பீட்டு பதிவு எழுதுகையில் கஸாலி கஸாலியா தெரிஞ்சார்...

      ஒரு பதிவு..அதுவும் இஸ்லாத்தை பரப்பி அல்ல... இஸ்லாமியர்கள் மட்டும் தான் கோபம் கொள்கிறார்களா?? பிறர் இல்லையான்னு ஒரு ஒப்பீட்டு பதிவு எழுதியதும் கஸாலி உங்களுக்கு இஸ்லாமியரா தெரிய ஆரம்பிச்சிட்டார்..

      எனக்கு ஒரு டவுட்டு..இப்ப உண்மையிலே மதவெறி பிடிச்சு இருக்கது உங்களுக்கா, கஸாலிக்கா???

      நீக்கு
    4. ///ஒரு கட்டுரை வருகிறதென்றால் அந்தக்கட்டுரையின் கருத்தை மட்டும் பாருங்கள். அந்தக்கருத்தோடு விவாதியுங்கள். அதை விடுத்து எழுதியவன் எந்த மதம் என்று பார்க்காதீர்கள்.///-----------ரிப்பீட்டு...........! well said..! நெத்தியடி..!

      நீக்கு
    5. சகோ.காரிகன் அவர்களே....
      //ஆனால் நீங்கள் வாழும் சமூகத்துக்காக என்ன செய்கிறீர்கள் என்பதே என் கேள்வி..//

      ------மத நல்லிணக்கத்தில் நாம் வாழும் சமூகத்துக்கு விழிப்புணர்வு ஊட்ட அவர் என்ன எல்லாம் செய்துள்ளார் என்று எடுத்துக்காட்ட.. இவரின் இந்த ஒரு பதிவு கூட போதுமே..!

      நீக்கு
    6. பெயரில்லா21 செப்., 2012, 4:47:00 AM

      உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா !!!

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அரசியலும், சினிமாவும் விவதிப்பவர் மிதவாத முஸ்லிம் என்றும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துகள் பதிவுகளில் வரும்போது அதை திருத்தும் விதமாக வாதாடுபவர்கள் மத வெறியர்கள் என்றும் இவர்களாக முடிவு செய்துகொண்டு அதன் அடிப்படையில் பின்னுட்டம் இடுகிறார்கள்.
    எல்லாம் வல்ல இறைவன் நல்லதே செய்வான் பாருங்கள் பதிவர் சந்திப்புக்கு முன்பு சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு எதிராக நடந்த மதுப்ரியர்களின் பதிவு தாக்குதல்களில் அவர்கள் தாக்கியது இஸ்லாத்தையும் நபி அவர்களையும்தான் எங்கெல்லாம் சிதறி கிடந்த என்னை போன்றவர்களை சிந்திக்க வைத்து , அவர்களாகவே நம்மில் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

    உங்கள் மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. /////எங்கெல்லாம் ஒரு சாரார் அடக்கப்படுகிறார்களோ? அல்லது ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களிலிருந்து ஒரு சிலர் திமிறிக்கொண்டு வெளியே வந்து அடக்குமுறைகளுக்கு எதிராய் குரல் கொடுப்பார்கள். அப்படி குரல் கொடுப்பவர்கள் மாற்று மதத்தினராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர் போராளி.... அவர்களே இஸ்லாமியர்களாக இருந்துவிட்டால் அவர்களின் பெயர் தீவிரவாதி. நல்லாருக்குடா உங்க நியாயம்?/////
    கலக்கிட்டீங்க தலைவா.....
    உங்களிடமிருந்தா இப்படி ஒரு பதிவா?
    நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா21 செப்., 2012, 4:52:00 AM

      என்ன அடக்குமுறை ஒன்றும் புரியவில்லை .. அமெரிக்காவில் இஸ்லாமியர்களை இரண்டாம் குடி மக்களாக பாவித்தால் அது அடக்குமுறை எனலாம், ஆனால் எவனோ ஒருவன் அந்த நாட்டு சட்டத்தை மீறமால் ஒரு படம் எடுத்தால் அது அடக்குமுறையா, அதற்கு ஏன் மத்தியக் கிழக்கில் உள்ளோர் பொங்கித் தள்ளுகின்றனர் .. என்னப்பா கொடுமை இது ?

      பாலஸ்தீனியரின் ஃபதாவை நான் ஆதரிக்கின்றேன். அவர்கள் போராட்டத்தில் நியாயம் இருக்கின்றது .. ஆனால் அல்-கய்தாவின் போராட்டத்தில் என்ன நியாயம் இருக்கின்றது. அமெரிக்கா மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளங்களை சுரண்டுகின்றது என்பார்கள்.. ஆனால் ஊசி இடம் கொடாமல் நூல் நுழையுமா ? இடம் கொடுத்தது யார் சௌதி மன்னர்கள் உட்பட மத்தியக் கிழக்கின் மன்னர்கள் தானே ... !!! என்னய்யா உங்க போராட்டமும் மண்ணாங்கட்டியும் ஒன்றும் புரியவில்லை ... !!!

      ஐரோப்பாவில் போய் அந்த நாட்டு சட்டத்தை மீறினால் அவன் சும்மா இருப்பானா ? அவன் சட்டத்தை மாற்றி ஷரியாக் கொண்டு வா என்று சொன்னால் உதைக்கத் தான் செய்வான் !! சௌதியில் உள்ள இந்துக்கள் சௌதியில் மனு சாஸ்திரம் கொண்டு வா எனப் போராடினால் நல்லாவா இருக்கும், இல்லை சும்மாத் தான் விடுவார்களா அரபிகள் ..

      சிந்திக்கமாட்டீர்களா ? நீங்கள் ... !!!

      நீக்கு
    2. பெயரில்லா21 செப்., 2012, 4:54:00 AM

      இன்னொன்றையும் சொல்லிவிடுகின்றேன். தமிழில் வகாபிப் பதிவர்கள் மட்டும் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களின் குரல்கள் ஆகிவிடாது .. ஏனைய பிரிவு முஸ்லிம்களான சூபி, சியா, அகமதியா, சிஸ்தி போன்றோரின் குரல்களையும் யாம் அறிய விரும்புகின்றோம். முடிந்த அளவில் உங்கள் குரூப்கள் பற்றிய தெளிவுகளை முஸ்லிம் - அல்லாதோருக்கு சொல்லிவிடுங்கள் !!!

      நீக்கு
  27. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா கருத்துக்களையும் ஒத்துக்கொள்கிறேன். வேண்டாத வன்முறையால் பெயரை கெடுத்துக்கொள்கிறார்களே என்று ஆதங்கமாக உள்ளது. மற்றபடி, வேண்டுமென்றே முஸ்லிம்களை சீண்டுகிறார்கள் என்றே நினைக்கிறேன். வன்முறை மூலம் அதற்க்கு சில முஸ்லிம்களும் பலியாகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா21 செப்., 2012, 5:57:00 AM

      @ பந்து - நீங்களாவது சரியாகப் புரிந்துக் கொண்டீர்களே ! ஒருவன் கோபப் பட படத் தான் அவனை சீண்டுவார்கள், அவன் கண்டுக்காமல் விட்டால் பாச்சா பலிக்காது என அடங்கிவிடுவார்கள் !!! பள்ளிக் கூடத்தில் பெற்ற அனுபவப் பாடம் இதுக் கூட சிலருக்குப் புரியவில்லை ! எதிர்ப்புக் காட்ட காட்ட வருங்காலத்தில் பலக் கார்ட்டூன்கள், படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கு, சில தலைமுறைக்குப் பின் அவை இயல்பாகவே கருதப்படும் நிலை வரக் கூட செய்யலாம் !!!

      நீக்கு
    2. //////கண்டுக்காமல் விட்டால் பாச்சா பலிக்காது என அடங்கிவிடுவார்கள் !!!//////---------ம்ம்ம்ம்....

      ஆகவே...

      எனதருமை இஸ்லாமிய சகோஸ்...

      இனி இவரு ஹிட்சுக்காக வெட்கமே இன்றி என்ன கன்றாவி கேவலத்தை செய்தாலும்... இனி இந்த 'இஸ்லாமோபோபியா இக்பால் செல்வன்களை' 'இப்படியே கண்டுக்காமல் விட்டுவிட வேண்டியதுதான்'...! அவரே தீர்வு சொல்லிட்டாரு...! கேட்டுக்குங்க...! முடிஞ்சது சகாப்தம்..! :-))) ஹா...ஹா...ஹா...

      நீக்கு
    3. பெயரில்லா21 செப்., 2012, 7:12:00 AM

      ஹிஹி ! விமர்சனத்துக்கும் - வெறுப்பேற்றலுக்கும் வித்தியாசம் தெரியாவதர் போல் உள்ளீர்களே சகோ.. எனது விமர்சனங்கள் ஒரு போதும் எனக்கான கண்ணியங்களை மீறியதில்லை .. எனது விமர்சனங்களை எதிர்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்களின் உரிமை ...

      இதே புறக்கணிப்புக்கள் உங்களுக்கும் கூட வரலாம் !!! நாம் ஒன்றும் செய்ய முடியாதுங்க !!!

      நீக்கு
  28. சவுதியில் தான் முகமது பிறந்தார், ஆனால் அங்கெல்லாம் அமெரிக்க தூதரகம் சகல பாதுகாப்புடன் தான் இருக்கிறது, யாரும் முற்றுகை இட்டது போல் தெரியவில்லை

    யாரும் போராட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் தொடர்பே இல்லாத்வர்களே இத்தகைய போராட்டங்களினால் பாதித்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ஒவ்வொருவரும் தத்தம் மதம் தாக்கப்படுது என்று கடுமையாகப் போராடி இருந்தால் இந்தியாவில் இந்துக் கோவில்கள் பல இடிக்கப்பட்டிருக்காது என்று கூடத்தான் சொல்கிறார்கள்.

    போராட்டம், உரிமை, தன்மானம் இதையெல்லாம் பொதுப்படுத்தி "ஞாயம்" பேசினால் ஒருவரும் இடம் பெயர்வதற்கு வாய்ப்பே இருக்காது, நாய்களைப் போல் என் இடத்துக்கு நீ ஏன் வந்தாய் ?' என்று பிரச்சனையாகிக் கொண்டு தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kovi Kannan, i appreciate your view: we are in a pluralistic country. No country is unique in itself with one religion. At this point, no religion should claim that it is the best religion and all other religions are worst and they all must be killed and destroyed. a good religion is the one that practices tolerance, non-violence, human rights, justice and peace and even forgives it's enemy.......! In the name of God, who practice division of caste, bribes, corruption, smuggling, killing, slavery, discrimination,women exploitation so on are all an addict and fraud religious believers. Religion should help one another to live in peace, justice and unity. True religion should be expressed or shown outside to the world by their good and moral examples. If a religion is a cause for tit for a tat, then something is wrong with the religion. Protest against distortion of one's religion is inevitable. But that should not be an attitude of revenge, killing and destruction. what you have conceived from your religion will be delivered. If you have conceived, peace, joy, love of your brethren, justice, tolerance, forgiveness, non violence so on you will be deliver all the goodness; if you have conceived, evil, terrorism, revenge, dirt, killing so on, then you will deliver only evils. Good tree bears good fruits; bad tree bears bad fruits. Likewise the religion. where there is hatred, let me sow love; where there is darkness let me give light; and where there is hurts and wounds, let me heal with forgiveness.

      நீக்கு
  29. அது ஒரு படமா. லொள்லு சபா மாதிரி இருக்கு. எடுத்தது ஒரு எகிப்தியன் இதுக்கு முஸ்லீம் பண்ணின அல்பர தான் கொஞ்சம் ஓவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா22 செப்., 2012, 6:38:00 AM

      நான் லொள்ளு சபாவை கேவலப்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். லொள்ளு சபாபவில் நல்ல சிரிக்கக் கூடிய காமெடிக் காட்சிகள் இருக்கும், ஆனால் இப்படத்தில் கழுதைக் காட்சியைத் தவிர வேறொன்றிலும் சிரிப்பே வரவில்லை ... !!! அப்படத்துக்கு எழுந்த எதிர்விளைவுகளும், போராட்டங்களும் தான் அக்குறையை தீர்த்தன .. !!!

      நீக்கு
  30. சிராஜ்,

    //கோவி கண்ணன், இக்பால் செல்வன், தருமி, கருமி, வவ்வாலு, சார்வாகன் வகையறா யாராவது படத்துக்கு எதிரா பதிவிட்டிருந்தால் நடுநிலையை மெச்சி இருக்கலாம்...//

    என்ன கொடுமை இது?

    இங்கே யாரு குருப்பா இருக்கா?

    மேலும் எனக்கு கடவுளும் இல்லை ,புனிதர்களும் இல்லை, அதன் பின்னர் பிள்ளையார் எல்லாம் வச்சு ஒரு கார்ட்டூன் போட்டாங்க அதுக்கு கூட நான் கன்டனம் தெரிவிக்கலை.

    இவ்வளவு ஏன் மறைந்த எம்.எஃப்.ஹீசைன் சரஸ்வதியை நிர்வாண படமாக வரைந்தார் அதற்கும் கண்டனப்பதிவிடவில்லை, நீங்க கண்டனம் செய்தீங்களான்னு இப்போ கேட்க வைக்கிறிங்க.

    எனக்கு புள்ளையாரும் ,முகமதுவும் ஒன்றே ,ரெண்டுமே வேண்டாம்.சாமியே இல்லைங்கிறேன் ,ஏன் கண்டனம் சொல்லவில்லைனு சொல்லிக்கிட்டு.

    சூரிய சக்தி, மழை, காற்று ,மண், மரம் , எனக்கு வேலை செய்ய உதவும் கணினி, வெயில் சுடாம ,முள் குத்தாம காக்கும் எனது செருப்பு எல்லாமே எனக்கு சாமி, எனக்கு தாகமா இருக்கும் போது கொஞ்சம் தண்ணிக்கொடுத்தா நீங்களும் எனக்கு சாமி, அதை விட்டுப்புட்டு புத்தகம் எழுதினவரு, அதுல சொன்னதுலாம் சாமின்னா அதுக்கு வேற ஆளைப்பார்க்கவும் :-))

    நீங்க சொல்லும் படம் எப்படி இருக்கும் ,எதிர்ப்பு சொல்லும் அளவுக்கு ஒர்த்தான்னு தெரியாம எதை வச்சு எதிர்ப்பாங்களாம், இல்லை நீங்க தான் அந்த படத்தினை பார்த்தீங்களா, யாரோ ஒருத்தர் அவதூறா இருக்குன்னு சொல்லிட்டா அப்படியே கண்ணை மூடிக்கிட்டு கலாட்டா செய்ய நான் ஒன்றும் மதவாதி இல்லை.

    தமிழ்நாட்டுல இம்புட்டு பேரு பொங்குறிங்களே உண்மையில எத்தனைப்பேரு அந்த படம் பார்த்தீங்க? இல்லை டிரெய்லர் பார்த்தீங்க?

    ஃபையர் படம் தடை செய்யணும்னு சொன்னது பழமைவாதிகள் கூட்டம், அதே போல இப்போவும் சொல்வதாக ஏன் நினைக்க கூடாது.

    உண்மையில் படம் உங்கள் உணர்வுகளை புண்ப்படுத்துகின்றது என்றால் கண்டனம் தான் சொல்லணும் ,வன்முறை அல்ல.

    அந்த படத்தின் சுட்டி கொடுங்க பார்த்துட்டு ,படம் மோசமா இருந்தா மோசமான படம் ,பார்க்க தகுதியில்லைனு விமர்சனம் செய்யுறேன்.

    பதிலளிநீக்கு
  31. // திருச்சியில் அன்சாரி என்பவர் ஏன் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்க முற்பட்டதனாலேயே !!!//
    மிகப்பெரிய அறிவாளி போல பதிவிடும் இக்பால் செல்வன் தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார்..
    இந்தியாவின் ரகசியங்களை விர்ப்பதர்க்கு அன்சாரி என்பவர் ரானுவத்திலா பணி புரிகிறார்..அப்பாடி அவர் உண்மையிலேயே ராணுவ ரகசியங்களை வைத்திருந்தால் அதை அவருக்கு தந்தது யார் என்று விசாரிப்பதை விட்டு அவர் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தார் என்று கூறுவது மகா முட்டாள்தனம்..
    அப்படி கொண்டு செல்பவருக்கு அதை இமெயிலில் அனுப்ப தெரியாதா? சீடி போட்டுதான் கொண்டு செல்ல வேண்டுமா?
    ஊடகங்களும் காவல் துறையினரும் ஒருவரை குற்றவாளியாக்குவதர்க்கு எந்த யுக்தியையும் கையாளுவார்கள் அது எவ்வளவு கேணத்தனம் என்றாலும்..இக்பால் செல்வன் அந்த வகைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா22 செப்., 2012, 6:35:00 AM

      இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
    2. பெயரில்லா22 செப்., 2012, 11:06:00 PM

      மர்மயோகியின் பெயர்க் காரணம் கேட்டமையின் கருத்தை நீக்கியதேனோ ? மர்மயோகி ஷைத்தானால் பாதிக்கப்பட்டதை மறைக்கவா / மறுக்கவா ?

      நீக்கு
  32. இதுவரைக்கும் உங்களை நான் ஓர் முஸ்லீம் பதிவராகவே நினைத்துப்பார்த்ததில்லை. எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள் பல்கலைகழககாலத்திலிருந்தார்கள். அவர்களில் வெறும் 3 பேர் மட்டுமே இப்போது தொடர்புகளை வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் நாங்கள் எப்பொழுதுமே எம்முடய மதத்தினை பற்றியே பேசுவதில்லை. அவர்களும் தங்களது மதம்தான் பெரிது, முகமது மட்டும்தான் பெரியவர் , மற்றயவர்கள் எவருமே மட்டமானவர்கள் என்று பேசியதில்லை. நானும் என்னுடய கடவுள்தான் பெரியவர் , மற்றயவ்ர்கள் எல்லாம் சிறியவர் என்று பேசியதுமில்லை..நீங்கள் கூட அதுபோலான ஆள்தான் என்று போன வாரம் வரை நினைத்திருந்தேன். சுகவனத்தின் ஏதோ ஒர் பதிவில் உங்களின் மறுமொழியினை பார்த்தபோது , சற்று அதிர்ச்சியாக இருந்தது. இப்போது அது உறுதியாகியுள்ளது.
    அந்த படத்தினை எடுத்தது ஒர் எகிப்திய கப்ரிக் கிறீஸ்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா கருத்துச்சுதந்திரத்தினை ஆதரிக்கும் நாடு என்பதும் தெரியும். ( டா வின்சிக் கோட் - படம் அமெரிக்காவில் தடை செய்யப்படவில்லை. ) பிறகு என்ன மண்ணுக்கு அமெரிக்காவையும் யூதர்களையும் எதிர்கிறார்கள் எனபது மெத்தப்படித்த நடு நிலைவாதியான உங்களிற்கு புரியாமல் போனது என்பது எனக்கு புரியவில்லை. உண்மை நிலை தெரிந்தும், உங்களின் மதம் அதனை உணர மறுக்கிறது. உங்களைப்போன்றவர்களே புரிய மறுக்கும்போது மற்றயவர்களைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது. என்னைபோலதான் நிறைய ஆட்கள் உங்களைப்பற்றி இன்று அறிந்துகொண்டிருப்பார்கள். வழக்கமாக உங்கள் பதிவிற்கு வந்து மறுமொழியிடுபவர்கள் இன்று வரவில்லை. அதைவிடுத்து வழக்கமான முஸ்லீம் பதிவர்களாக தம்மை இன்ங்காட்டிகொண்டவர்களே வந்துள்ளார்கள். உங்களுடய இந்தப்பதிவு எனக்கு ரசிக்கத்தக்கதாக இல்லை.
    சில பதிவர்கள்தான் ஆளமான தாக்கத்தினை ஏற்படுத்துவார்கள். அதில் நீங்களும் இருந்தீர்கள். இனி எனக்கு நீங்களும் சாதரண ஒரு பதிவர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வருடங்களை கடந்து பதிவுலகில் இருக்கிறேன். 491 பதிவுகள் இதுவரை போட்டிருக்கிறேன். அதில் எத்தனை இஸ்லாம் பதிவுகள் என்று தெரியுமா? இத்துடன் சேர்த்து இரண்டு. அவ்வளவுதான் இஸ்லாமிற்காக நான் எழுதிய கட்டுரைகள். மற்ற எல்லாமே பொதுவானவைகள் தான். இந்தக்கட்டுரை கூட நடுநிலையுடன் எழுதிய அரசியல் கட்டுரைதான். இன்னொரு விஷயம்.....சில பதிவர்கள்தான் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கீர்கள். என்னைப்பொருத்தவரையில் பதிவுகள்தான் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர பதிவர்கள் அல்ல.... பதிவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்போது பதிவராக அவன் ஜெயிக்கிறான்.ஆனால், ஒரு படைப்பளியாக அவன் தோற்கிறான். பதிவர்களை பார்க்காதீர்கள். பதிவுகளை மட்டும் பாருங்கள்.

      நீக்கு
  33. இந்த பதிவுக்கு எதிர்பதிவெழுதி எனக்கு இலவச விளம்பரம் கொடுக்க நினைப்பவர்கள் தாராளமாக கொடுக்கலாம் ஹி....ஹி..../// அல்டிமேட் அண்ணே :))

    பதிலளிநீக்கு
  34. // அவர்களின் பெயர் போராளி.... அவர்களே இஸ்லாமியர்களாக இருந்துவிட்டால் அவர்களின் பெயர் தீவிரவாதி. நல்லாருக்குடா உங்க நியாயம்?/// நல்லா கேட்டிங்க போங்க..!! இப்புடி எல்லாம் கேட்டா நொண்டி நொண்டி பறக்குது அப்புடின்னு தான் சொல்லுவாங்க :)

    பதிலளிநீக்கு
  35. //கோவி கண்ணன், இக்பால் செல்வன், தருமி, கருமி, வவ்வாலு, சார்வாகன் வகையறா யாராவது படத்துக்கு எதிரா பதிவிட்டிருந்தால் நடுநிலையை மெச்சி இருக்கலாம்...//

    இந்த அதிமேதாவி சான்றிதழ் கொடுப்பதை எனக்கு சட்டையில் குத்திக் கொள்ள அவசியம் இல்லை, ஒரு மதவாதி கொடுக்கும் சான்றிதழ் எனக்கு தேவையற்றதும், நான் புறக்கணிப்பதும் ஆகும்.

    "சம்மந்தப் பட்ட திரைப்படம் எடுத்தவர்களின் எண்ணத்தை நாம் போற்ற ஒன்றும் இல்லை, மாறாக கண்டிக்கத் தக்கது, தடைசெய்யத் தக்கது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, வேண்டுமென்றே உணர்ச்சி தூண்டுவதற்காக எடுக்கப்பட்டது"

    - இது என்பதிவில் எழுதியது தான் அதிமேதாவி பதிவைப் படிக்காம்ல் உளறிவிட்டுச் சென்றதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இவரைப் போன்றவர்களுக்கு பதில் சொல்வது கூட எனது நேர விரயமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவி கண்ணன் அண்ணன்....

      சாரி.. உங்க கமெண்ட் கவனிக்கல..பொதுவா எந்த போஸ்டுக்கும் 2 வது மற்றும் 3வது நாள் போய் கமெண்ட் பார்ப்பதில்லை... அதான் கவனிக்கல..

      // இந்த அதிமேதாவி சான்றிதழ் கொடுப்பதை எனக்கு சட்டையில் குத்திக் கொள்ள அவசியம் இல்லை //

      என்னை அதி மேதாவின்னு சொன்னதுக்கு நன்றி... ஆயிரம் இருந்தாலும் எதிர் கருத்து இருப்பவர்கள் பாராட்டும் பொழுது மனது ரெக்கை கட்டி பறக்கத்தான் செய்கிறது....

      // "சம்மந்தப் பட்ட திரைப்படம் எடுத்தவர்களின் எண்ணத்தை நாம் போற்ற ஒன்றும் இல்லை, மாறாக கண்டிக்கத் தக்கது, தடைசெய்யத் தக்கது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, வேண்டுமென்றே உணர்ச்சி தூண்டுவதற்காக எடுக்கப்பட்டது"//

      இல்லைணே..உங்க பதிவ நான் அதிகம் படிக்கிறதே இல்ல... உங்க கமெண்ட்ஸ் வச்சு விமர்சிக்கிறது தான்... எந்த பதிவுன்னு தெரியல, அத போய் தேடிபடிக்கவும் விரும்பல...ஆனா அந்த பதிவுல 10 பத்தி இருந்தா ஒரு 2 பத்தி இது மாதிரி இருந்து இருக்கும்.. பாக்கி 8 பத்தி வழக்கம் போல் உங்கள் இஸ்லாமிய எதிர்ப்ப தான் காட்டி இருக்கும்...

      நீக்கு
  36. //போட்டது எல்லாம் நடுநிலை பேணும் எனது அருமை அண்ணன் கேபிள் சங்கரும், நண்பர் சிவாவும் மற்றும் நண்பேன்டாவும் தான்... கோவி கண்ணன், இக்பால் செல்வன், தருமி, கருமி, வவ்வாலு, சார்வாகன் வகையறா யாராவது படத்துக்கு எதிரா பதிவிட்டிருந்தால் நடுநிலையை மெச்சி இருக்கலாம்.... ஹூம் என்ன செய்வது?? அப்படி ஒன்று இருந்தால் தானே???//

    தேவையில்லாமல் என்னைப் பற்றி கழிவறை சுவற்றில் எழுதுவது போல் கண்ட இடங்களில் எழுதிவருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இவர் யார் என்றே எனக்கு தெரியாது, இவருடன் நான் விவாதம் செய்யவும் விரும்பியதில்லை. ஒரு யூதன் படமெடுத்து தேவையற்று பிரச்சனையை தோற்றுவித்ததைப் போல் தான் இந்த நபர் தேவையற்று மனம் போனப் போக்கில் எழுதிவருகிறார். இதுபோன்ற நபர்களைத் தூண்டுவதற்குத்தான் அவர்களும் படமெடுக்கிறார்கள் போலும்.

    :(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தேவையில்லாமல் என்னைப் பற்றி கழிவறை சுவற்றில் எழுதுவது போல் கண்ட இடங்களில் எழுதிவருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் //

      தாராளமா கண்டிங்க..உங்களுக்கு இல்லாத உரிமையா??? உங்கள பத்தி எழுத எனக்கு உரிமை இருக்கு, அத கண்டிக்க உங்களுக்கு உரிமை இருக்கு... அப்புறம் இன்னொரு விஷயம்.. கழிவறைய விட்டு வெளில வாங்கண்ணே....இந்த உலகத்தில் எவ்வளவோ இடம் இருக்கு உட்கார....

      // இவர் யார் என்றே எனக்கு தெரியாது, /// ஹா..ஹா..ஹா...

      // இவருடன் நான் விவாதம் செய்யவும் விரும்பியதில்லை.// செய்ய வேண்டாம்... யார் வேணாம்னா??? நான் விவாதத்துக்கு உங்கள கூப்பிடவே இல்லையே?? என்று எனது 3 பின்னூட்டங்களை பிரசுரிக்க மறுத்தீர்களோ??(எல்லாம் தரமான வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்டவை, நான் ஒரு போதும் தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியது கிடையாது, பதிவுகளில்) அன்றே உங்கள் நடுநிலமை பல்லிலித்துவிட்டது... சோ நோ வொர்ரீஸ்... பட் இனி நான் உங்கள் தளத்துக்கு அடிக்கடி வருவேன்... இறைவன் நாடினால்... முடிந்தால்...

      நீக்கு
  37. நண்பர் ரஹீம் கசாலிக்கு, நாம் பெயரிலேயே மதம் இருக்கிறது. எனவே உங்கள் மதம் என்ன வென்று அறிந்துகொள்ள நான் முயற்சி செய்ய தேவை இல்லை. எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமலேதான் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.நீங்கள் இப்படி எழுதினால் தான் படிப்பேன் என்று நான் சொல்லவில்லை.இணையத்தில் பல இஸ்லாமிய மதகுரல்கள் ஒலிப்பது தெரிந்ததே.ஹிந்து டாட் காம்,எழில், அரசன் இன்னும் பல பதிவர்கள் ஹிந்து மதத்தை பற்றி எழுவதை நீங்கள் நடுநிலைமை என்று ஒத்துக்கொள்வீர்களா?அதே போலவே தான் தான் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி ஒருவர் எழுதும்போது அது விமர்சனத்திற்கு உட்படுகிறது. நீங்கள் சொல்வதுபடி என் கருத்தை படி என் மதத்தை பார்க்காதே என்பது நல்ல அறிவுரைதான். அப்படியானால் இன்னசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் படத்தை எடுத்த நபரின் மதத்தை என் விமர்சிக்கிறீர்கள்? அது ஒரு காப்டிக் கிருஸ்துவ தொடர்புடைய ஒரு வெட்டி மனிதனால் ஒழுங்கற்ற முறையில் எடுக்கப்பட்ட குப்பை. ஆனாலும் இது ஒரு யூத சதி என்று உங்கள் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் யூதவெறுப்பை வெளியிடுவது ஏன்? இதற்கும் அமெரிக்க அரசுக்கும் என்ன தொடர்பு?நீங்கள் இப்படி அண்ணா சாலையில் அதிரடியாக அதகளம் செய்வதால் ஒபாமா மன்னிப்பு கேட்கப்போகிறாரா? இதை இஸ்லாம் பிறந்த தாய் மண்ணில் உங்கள் கனவு சவூதியில் ஏன் இஸ்லாமியர்கள் எதிர்க்கவில்லை?அமெரிக்காவில் இருக்கும் எந்த முஸ்லிம் அமைப்பும் இதற்க்கு கண்டனம் வெளியிடாதது ஏன்?அங்கே உள்ள முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்கள் கிடையாதா? இப்படி முஸ்லிம்களின் சகிப்புத்தன்மைக்கு கேள்விக்குறி வைக்கும் போராட்டம் உங்கள் சமூகத்தின் மீது நடுநிலையாளர்கள் கொண்டுள்ள சந்தேகத்தை உறுதி செய்வது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் கோடிட்டு காட்டியுள்ள போராட்டங்கள் எல்லாமே மதவெறியர்களால் நடத்தப்பட்டவைதான். ஆனால் அங்கு கூட எந்த கொலை யும் நடைபெறவில்லை. ஒருவர் இங்கு சொல்கிறார் :அரசியல் சினிமா என்று எழுதினால் நடுநிலமையாம் மதம் என்று எழுதினால் மதவெறியாம் என்று. உண்மைதானே? அப்படித்தானே நீங்களும் பிற மத பதிவர்களை மதிப்பீடு செய்கிறீர்கள்? எனவேதான் நான் சொன்னேன் மதம் என்று வந்துவிட்டாலே உடனே பல சுவர்கள் நம்மை பிரிக்க வந்துவிடும் என்று.. ஒரு முஸ்லிம் பதிவரால் நடுநிலைமையோடு பதிவு எழுத முடியாதா என்று கேட்டிருக்கிறீர்கள். தாராளமாக எழுத முடியும் நீங்கள் அப்படிப்பட்டவர்தான்..மத விசுவாசம் மனதில் உறைந்து கிடந்தால் போதுமே அதை முகத்தில் அரிதாரமாக பூசிக்கொள்ள வேண்டுமா என்பதே இங்கு கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் என்னால் நடுநிலையுடன் பதிவெழுத முடியும் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. இந்த கட்டுரை கூட நடுநிலை கட்டுரைதான். இதை நடுநிலை என்று ஒத்துக்கொள்வதற்கு என் பெயர்தான் தடையாக இருக்கிறது போலும்.அந்த படத்தை எதிர்ப்பதென்பது அவர் சார்ந்திருக்கும் மதத்திற்காக அல்ல.... அதில் இருக்கும் கருத்திற்காக.... அது தவறான புரிதலை தரும் என்பதற்காக..... என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா...

      நீக்கு
  38. பெயரில்லா22 செப்., 2012, 6:30:00 AM

    பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார்கள் போல உங்களவர்கள் !!! சற்று முன் தான் பார்த்தேன் பித்துப் பிடித்து சும்மா இருந்த கார்களையும் , லாரிகளையும் கொழுத்தி, உருட்டிக் கொண்டு பாகிஸ்தானில் ஒருக் கூட்டம் அலைகின்றது ... எல்லோரும் நல்ல மருத்துவராகப் பார்க்கச் சொல்லுங்கள் .. !!! அது சரி ! உங்களுக்கே உடனடி சிகிச்சைத் தேவைப்படுகின்ற போது நீங்கள் எங்கே போய் அங்கே சொல்வது !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்பால் செல்வன் நீங்கள் எந்த டாக்டர்யிடம் சிகிச்சை எடுத்துகொண்டுள்ளீர்கள்.

      நீக்கு
    2. அவரு ஏற்கனவே இசுலாம திட்டி முசுலீம் எதிர்ப்பு பதிவுகளா போட்டு ஹோமோ செக்ஸ ஆதரவு செஞ்சு மாஞ்சு மாஞ்சு ராப்பலகா தொடர் பதிவு எழுதி கடசீல மண்ட கொலம்பி அரைப்பைத்தியம் புடிச்சு டாக்டர் அட்வைசு படி பல மாசம் பதிவு போடாம இருந்து இப்போதான் கொஞ்ச காலமா தெளிவு கிட்டி மீண்டு வந்துருக்காருபா. அவரை மருவாட்டி அதே ஆஸ்பத்திரிக்கி அனுப்பிருவீங்க போலவே. பாவம்பா அவரு. உசுபேத்தி உடாதிங்கோ. அப்புறம் கியூர் பண்ணவே முடியாத படிக்கி ஒரேதிரியா பைத்தியம் ஆகிற போறாரு. பாத்துக்குங்க. அம்புட்டுதான் சொல்வேன்.

      நீக்கு
    3. பெயரில்லா22 செப்., 2012, 11:02:00 PM

      @ நிஜாம் - ஐயோ ! ஐயோ !!! செம காமடி பீஸ் பாஸ் நீங்க !!! நிச்சயமாக ஏர்வாடியில் எடுக்கவில்லை .. ஏனெனில் அங்கு தான் நீங்கள் உள்ளீர்கள் எனக் கேள்விப் பட்டேன். அதனால் அப்பக்கம் தலைவைக்கவில்லை !!!

      நீக்கு
    4. பெயரில்லா22 செப்., 2012, 11:09:00 PM

      நிஜாம் பாக்கு போய் ARR பாக்கு வந்துச்சா !!! மாடு பேசியது போல இப்போ பாக்கு எல்லாம் பேசத் தொடங்கிவிட்டதே.. அற்புதம் அற்புதம் !!!

      என்ன சார் செய்ய பித்துப் பிடித்தால் கூட டாக்டர் கிட்ட தான் போய் ஆகணும், கடவுளே கடவுளே என்றால் காய்ச்சல் போகுமா சொல்லுங்க .. விழுந்து விழுந்து தொழுதாலும், கும்பிட்டாலும் ஆத்திரம் அவசரத்துக்கு சக மனிதன் தான் தேவைப்படுவான் .. உங்க சூப்பர் டூப்பர் கடவுள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கொட்டாவிக் கொண்டிருப்பார் !!!

      நீக்கு
    5. இக்பால் செல்வன்@
      //நிச்சயமாக ஏர்வாடியில் எடுக்கவில்லை// அட கொடுமையே.... பாவம் பாஸ் நீங்க
      //என்ன சார் செய்ய பித்துப் பிடித்தால் கூட டாக்டர் கிட்ட தான் போய் ஆகணும்// இக்பால் செல்வன் பிறகு வெறு எந்த டாக்டர் கிட்டே போனிர்கள் 3 மாதம்.
      //ஆத்திரம் அவசரத்துக்கு சக// உங்கள் பிதிவில் அடுத்துவிடுங்கள்.

      நீக்கு
  39. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அநாகரீகமான கமெண்டுகளை போடவேண்டாம் நண்பர்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மதத்தை இழிவுபடுத்தி வெளிவந்த படம் கண்டிக்கதக்கது;
      அதேசமயம் இவர்கள் தேர்ந்தெடுத்த போராட்ட வழியும் தவறு.!
      எவரோ மேற்கொண்ட செயலுக்கு எவரோ (எவருடைய குடும்பமோ) தண்டிக்கபடுவது நியாயமற்ற ஒன்று.

      " வெண்ண தின்னவன் ஒருத்தன், விரல் சூப்புறது இன்னொருத்தனா.?"

      நீக்கு
  40. //ஜீஸஸ் கிறிஸ்துவை இழிவுபடுத்தி The Da Vinci Code
    (டாவின்சி கோட்) என்ற படம் வந்தபோது அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் போராட்டம் செய்து பல நாடுகளில் அந்தப்படத்தை தடை செய்ய வைத்துள்ளார்கள். //
    //.ஏனென்றால், யூதர்கள் கடவுளாக நினைக்கும் மோசஸை நபி மூசா(அலை) என்றும், கிறிஸ்துவர்கள் கடவுளாக நினைக்கும் ஜீசஸை நபி ஈசா(அலை) என்றும் (இறைதூதர்களாக) பார்ப்பவர்கள். //
    The Da Vinci Code படத்துக்கு எந்த இஸ்லாமிய அமைப்பு அல்லது நாடு எதிர்ப்பு தெரிவித்தது???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>>>The Da Vinci Code படத்துக்கு எந்த இஸ்லாமிய அமைப்பு அல்லது நாடு எதிர்ப்பு தெரிவித்தது???>>>>

      தடை செய்த நாடு பாகிஸ்தான்.
      படத்தை எதிர்த்த அமைப்பு Pakistan's six-party 'Islamic alliance'.

      நீக்கு
    2. பெயரில்லா22 செப்., 2012, 11:04:00 PM

      உலகிலேயே கிறித்தவர்கள் அதிகம் வாழும் அமெரிக்காவிலேயே டா வின்சி கோட் தடை செய்யப்படவில்லை ... ஹிஹி !!!

      தி ஆனியன் பத்திரிக்கையில் கூடத் தான் நிர்வாணமாக கூட்டுறவில் ஈடுப்பட்டன மூஸா நபியும், ஈஸா நபியும் எந்த முஸ்லிமும் அதற்கு எதிராக போராடவில்லையே சகோ ... !!!

      ஏன் என்று தெரியுமோ ?

      நீக்கு
  41. பொருத்தமான நேரத்தில் சரியான பதிவு ..நன்றி

    பதிலளிநீக்கு
  42. மனிதநேயமில்லா அமெரிக்கா ஓனாய்கள் வெளியிடப்பட்டுள்ள INNOCENSE OF MUSLIMS என்ற திரைப்படம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை மிகவும் வேதனைப்பட செய்துள்ளது இத்திரைப்படம் இனிய வாக்கும் இனிய செயலும் செய்வதையும் சகோதரத்துவத்தை மனித குலத்திற்கு பெருமையாக விளங்கிய நபிகள் நாயகம் அவர்களை மிகக் கீழ்த்தரமாக சித்தரித்துள்ளான் அமெரிக்க ஓனாய் ஏன் நம் தமிழகத்தில் எடுக்கின்ற அனேக திரைப்படத்திலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை உருவாக்கிவருகிறார்கள் நம் நடிகைகளுக்கு கோவணம் கட்டிவிட்டு படம் தாயாரிக்கின்ற கேடுகெட்ட தயாரிப்பாளர்கள் நடிகர்களும்
    இதற்கு காரணம் நாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமைதான் ஒரு மதத்தை பற்றி படம் எடுக்கும்போதே காலில் கிடப்பதை எடுத்து அடிக்க வேண்டும்

    திரைப்படங்கள் சகோதரத்துவத்தை அன்பையும் மட்டுமே போதிக்க வேண்டும் இப்படி வன்முறையை தூண்டுவதாக இருக்க கூடாது

    இதுதொடர்பாக இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வேதம் ஓதுகின்ற இந்து முன்னனி ஓனாய்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? மானகெட்ட துப்புகெட்ட ஓனாயின் அடிவருடிகள் இந்தியாவில் இருக்கும் இந்து முன்னனியினர்கள் http://kenakkirukkan.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.