என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

18 இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல..........




நேற்று தமிழ்மணம் பற்றி தம்பி<> அதிரடி ஹாஜா
ஒரு பதிவிட்டிருந்தார்.புதிய பதிவர்களை அங்கீகாரம் செய்ய தமிழ்மணம் முயற்சிக்க வேண்டும் என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு வரி..... /////அதாவது ஒரு 100 அல்லது 150 நபர்கள் படிக்கும் பட்ச
த்தில்  அதை வாசகர் பரிந்துரைக்கு எடுத்து கொள்ளலாம்.////என்று ஆலோசனையும் சொல்லியிருந்தார். இதில் எனக்கு உடன்பாடில்லை.

புதிய பதிவர்களின் பதிவுகள் ஓரிரு ஓட்டு வாங்கவே மூச்சு தள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்கள் என்னதான் அருமையாக பதிவு எழுதினாலும் முன்னணிக்கு வருவது இயலாத காரியமாக இருக்கிறது. வெறும் 50 ஹிட்ஸ்களிலேயே முடங்கி போய்விடுகிறது. அவர்களில் 150 ஹிட்ஸ்கள் எங்கிருந்து வாங்குவது?

அதேநேரம் பிரபல பதிவர்கள் அப்போதும் சூடான இடுகைகளில் வந்துவிடுவார்கள்.

இந்தப்பிரச்சினைக்கு எனக்குத்தெரிந்த ஒரேயொரு தீர்வுதான் உள்ளது. தமிழ்மணத்தில் புதிய வலைத்தளத்தை இணைக்கும் போது முதல் பத்து பதிவுகள்வரை புதியது என்று அடையாளம்் காட்டும். அவர்கள் எப்போது இணைத்தாலும் இப்படித்தான் காட்டும். அதைப்போல புதிய பதிவர்களுக்காக புதிதாக ஒரு பகுதியை தமிழ்மணத்தில் சேர்க்கவேண்டும். வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள், திரைமணம் போல புதியவர்களின் பதிவுகள் என்று ஒரு பகுதியை சேர்த்து, அதில் புதிய பதிவர்களின் பதிவுகள் பெறும் ஹிட்ஸ் அடிப்படையில் அதை வரிசை படுத்த வேண்டும்.இதை  எப்போதும் செய்ய தேவையில்லை. ஆரம்பத்தில் முதல் பத்து பதிவுகளுக்கு மட்டும் அப்படி செய்தால் போதும். அதன்பின் தான் அவர்கள் பழைய பதிவர்கள் ஆகிவிடுவார்களே? இப்படி புதிதாக வரும் அனைத்து பதிவர்களுக்கும் இந்த முறையை கையாளலாம்.

இது என் ஆலோசனை மட்டுமே....
செயல்படுத்துவது தமிழ்மணம் கையில் தான் உள்ளது. பார்க்கலாம்......



Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. இப்பதான் காஜா பதிவு படிச்சேன் கஸாலி.என்னவோ காஜா கருத்து சரியென படுகிறது எனக்கு

    பதிலளிநீக்கு
  2. எப்படியோ... அனைவரின் பதிவுகளிலும் நல்ல கருத்துக்களைச் சொல்லும் பதிவுகள் அனைவராலும் படிக்கப்படவும். ஆதரிக்கப்படவும் வேண்டும் என்கிற ஒரே எண்ணம்தான் எனக்கு, நீஙகள் சொல்லுகிற நடைமுறையும் நல்லாவே இருக்குது தம்பி.

    பதிலளிநீக்கு
  3. பத்து ஓட்டுக்கெல்லாம் நாக்குதள்ளிடும்! என் கவிதை பதிவுக்கு எல்லார்கிட்டையும் மெரட்டி மெரட்டி ஓட்டு போட வச்சேன்! நம்மலான முடியாதுப்பா :-))

    அங்கே ஆஷிக்கின் கமென்ட்டை அப்படியே வழிமொழிகிறேன். அதான் தீர்வா இருக்கும்னு தோணுது... !!

    பதிலளிநீக்கு
  4. இதுதானே அழகு....ஒரு பதிவரின் கருத்துக்கு இந்த மாதிரி எதிர்கருத்தை நல்லவிதமாக பதிவு செய்வது எப்படி என்பதை சில குண்டக்கமண்டக்க பதிவர்கள் உங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்..நீங்கள் சொன்ன ஆலோசனையும் சரியென படுகிறது....மொத்தத்தில் தமிழ்மணத்தில் ஒரு மாற்றம் வந்தால் சரிதான்..

    பதிலளிநீக்கு
  5. நான் பழைய பதிவர்தாங்க. முக்கி முனகிப் படாத பாடெல்லாம் பட்டு அறுபது பதிவுக்கு மேல போட்டேன். பருப்பு வேகல.

    வலைச் சரத்தில் யாரை யாரையெல்லாமோ அறிமுகப் படுத்தினாங்க. என்னைச் சீந்துவாரில்லை.

    கடையை இழுத்து மூடிட்டுப் புதுப் பேர்ல புது வேஷத்தோட தமிழ்மணத்தில் நுழைஞ்சிருக்கேன்.

    தாக்குப் பிடிப்பேனா???

    பார்க்கலாம்!!!

    பதிலளிநீக்கு
  6. யார் சொல்றது சரின்னு தெரியல.... முட்டி மோதி வர வேண்டியது தான்.... இது தான் என் கருத்து

    பதிலளிநீக்கு
  7. @அறுசுவை மருத்துவன்..

    // கடையை இழுத்து மூடிட்டுப் புதுப் பேர்ல புது வேஷத்தோட தமிழ்மணத்தில் நுழைஞ்சிருக்கேன். //

    அதெல்லாம் ஒரு கருமாந்திரமும் தேவை இல்லை சகோ.... பேமஸா இருக்கிற நாளு பேர் தளத்துக்கு போய் குண்டுக்க மண்டக்க கமெண்ட் போடுங்க... வவ்வால்லாம் அதான் செஞ்சிகிட்டு இருக்கார்.... யாரையாவது திட்டுங்க.... எதுவும் வொர்க் அவுட் ஆகலயா?? இருக்கவே இருக்கு இஸ்லாம்.... நபி ஸல் அவர்கள் 4 கல்யாணம் செஞ்சது அநியாயம், பெண்கள் அங்கங்களை மூட வைப்பதா?? அது அநாகரிகம், அவுத்து போட்டுகிட்டு வர்றது தான் நாகரிகம்னு ஒரு போஸ்ட் போடுங்க.. அப்புறம் பாருங்க எல்லாருக்கும் உங்களை தெரியும்...

    இது கூட தெரியாட்டி நீங்க எப்படி பாஸு பேமஸ் ஆக முடியும்... அய்யோ..அய்யோ...

    பதிலளிநீக்கு
  8. உண்மையிலேயே நல்லதொரு ஆலோசனையை தமிழ்மணத்திற்கு வழங்கியிருக்கிறீர்கள்..!

    பதிலளிநீக்கு
  9. இதுவும் ஒரு நல்ல யோசனை தான்... பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு

  10. நல்ல கருத்துக்கள்! தமிழ் மணம் செயல்படுத்தலாம்!இதனால் பதிய பதிவர்கள்
    வளர வழி பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  11. இதுவும் சரியாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா14 செப்., 2012, 6:41:00 PM

    உங்களின் யோசனை மிக அருமையாக உள்ளது ... இதனையே நானும் வழிமொழிகின்றேன் !!!

    பதிலளிநீக்கு
  13. மேல் நாட்டு அறிஞர் ...சாரி.. மேல் நாட்டில் வசிக்கும் அறிஞர்.இக்பால் செல்வனே இதை "வழிமொழிகின்றேன்" னு சொல்லிட்டாரு... ரஹீம் கஸாலி கொடுத்து வச்சவருதான் ...

    பதிலளிநீக்கு
  14. நல்ல ஆலோசனைதான்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் பாய் , நீங்க பேசாம "தமிழ் பதிவுலகில் உங்கள் பதிவுகளை பிரபலமாக்குவது எப்படி" என்று ஒரு புத்தகம் போடலாம்?


    பதிலளிநீக்கு
  16. யாரு சொல்லவது உண்மை...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.