நான் இப்ப உங்களுக்கு ஒரு கத சொல்லப்போறேன்.
ஒரு நாட்டுல ஒரு வெங்காய யாவாரி.சொந்தமா வெங்காய விவசாயம் பண்ணி யாவாரம் பண்ணிக்கிட்டு இருந்தான். இப்பத்தான் வெங்காய வெல ஏறிப்போச்சா ஒருத்தன் கூட வாங்கல. அப்ப பக்கத்து நாட்டுல வெங்காயம்ன்னா என்னன்னே தெரியாம இருக்காங்கன்னு கூகல்ல தேடிட்டு இருக்கும்போது எதார்த்தமா கண்டுபுடுச்சான். அங்கே போயி யாவாரம் பன்னுவோம்ன்னு மூட்ட மூட்டையா வெங்காயத்த எடுத்ததுக்கு கிளம்புனான். அங்கே போயி யாவாரம் பண்ண ஆரம்பிக்கையில ரெண்டு பேரு வந்து..........
"தம்பி நீ இந்த நாட்டுக்காரனா?"
"இல்லன்னே...நான் பக்கத்து நாடு"
"பக்கத்து நாட்டு காரங்க இங்கே யாவாரம் பண்ணனும்னா எங்க ராசாட்ட அனுமதி வாங்கணும், தெரியும்ல"
"ராசாட்டயா? அவருதான் சி.பி.ஐ.விசாரணையில இருக்காரே"
"நான் சொல்றது எங்க நாட்டு ராசாட்ட"
உடனே யாவாரி அவ்வளவு வெங்காயத்தையும் எடுத்ததுக்கு அரமனைக்கு போனான். ராசாவ பாக்க...
அங்கேபோய் கேட்டான்
"ராசா இல்லையா?".
"இருக்காரு இந்த ராத்திரி நேரத்துல எதுக்கு நீங்க வரை பாக்கணும் "
"யாவார விஷயமா அவர பாக்கணும்"
"அவரு மானாட மயிலாடபாத்துக்கு இருக்காரு "-ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே கரண்டு போயிருச்சு. ஆனா இன்வெட்டர்ல லைட்டு எரிஞ்சுச்சு. ராசா வெளில வந்தாரு.
"என்ன தம்பி விஷயம்?"
"வெங்காய யாவாரம் பண்ணலாம்ன்னு வந்தேங்க...ஆனா....நான் உங்க நாட்டுல யாவாரம் பண்ணனும்னா நீங்க பர்மிசன் கொடுக்கணுமாம்"
"ஆமா, வெங்காயம்னா என்ன தம்பி?"
"அதான் தெனமும் டி.வி-ல காட்டுறாங்களே? நீங்க பாத்தது இல்லையா?"
"நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு...எப்போது நாடகம், கலை நிகழ்ச்சிதான். சரி தம்பி நீயே சொல்லு"
"வெங்காயம்னா....உரிச்சா கண்ணுல தண்ணி வரும், வெலைய கேட்டா நெஞ்சு வலி வரும்"
"தம்பி நான்ராசா. என்கிட்டே வெலைய சொல்லாத....எனக்கு எத்தனை கோடி இருக்கும்ன்னு எனக்கே தெரியாது. ஒரு லட்சம் கோடிக்கு மேல இருக்கு...அதுனால வெலைய பத்தி நீ கவலை படாதே....விஷயத்தை மட்டும் சொல்லு.ஒரு வெங்காயமோ என்னவோ பேரு சொன்னியே அந்த பழத்த எடு சாப்புட்டு பாப்போம்"
"அது பழ ம் இல்லேங்க ராசா"
"அப்படின்னா காயா. பரவாயில்ல ஒன்னு எடு சாப்புடுறேன்"
"இது காயும் இல்ல."
"அப்பனா பூவா?"
"பூவும் இல்ல. உறிக்க உறிக்க ஒண்ணுமே இருக்காது"
"டே...என்ன விளையாடுறியா ஒண்ணுமே இல்லாத ஒன்ன, எங்க மக்கமேல கட்ட பாக்குறியா?யாரங்கே முதல்ல இவன புடுச்சு தூண்ல கட்டுங்க"
"அய்யய்யோ ராசா கொஞ்சம் இருங்க...இது பூவா காயா பழமான்னு எனக்கே தெரியாது. இத வெறும் வாயில சாப்பிட முடியாது.சமையல்ல போட்டா கமகமன்னு இருக்கும்."
"அப்படியா, அப்படின்னா அது இங்கே இருக்கட்டும். நான் சமையல் செஞ்சு சாப்புட்டு சொல்றேன். உன்னோட போன் நம்பர கொடுத்துட்டு போ...நான் போன் போடுறேன்."
சரின்னு சொல்லிட்டு யாவாரி கிளம்பிட்டான்.
ரெண்டு நாளைக்கு அப்புறம் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. உடனே கிளம்பி வான்னு...இவனும் கிளம்பி போனான்.
"தம்பி உங்க வெங்காயத்தை சாப்பிட்டு பாத்தேன். நல்ல ருசி. நானே எல்லாத்தையும் எடுத்துக்கிறேன். அதுக்கு பதிலா இதை வச்சுக்க"ன்னு ரெண்டு மூட்டைய கொடுத்தாரு...அதுல பாத்தா தங்கமும் பணமும் இருந்துச்சு.
"ராசா.எல்லாம் எனக்குத்தானா? இந்த வெங்காயத்துக்கு இவ்வளவு பரிசா'"
"என்ன இப்புடி சொல்லிட்டே...தங்கம் வைரத்த விட எனக்கு வெங்காயம் தான் பெருசு....எங்க நாட்டுல விலை மதிக்க முடியாத பொருளா வெங்காயத்தை அறிவிக்க போறேன். இதை எப்படி வெவசாயம் பண்றதுன்னு சொல்லிட்டு போயிரு..."
யாவாரி எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தான். அவரு கொடுத்த காச வச்சுக்கு ஏகபோகமா வாழ்ந்தான். இத பாத்த பூண்டு யாவாரிக்கு பொறாம வந்துடுச்சு. நம்மளும் ராசாட்ட போயி நம்ம பூண்ட கொடுத்து இவன மாறி பெரிய பணக்காரனா ஆகிடனும்ன்னு ஆசை வந்துச்சு. அவனும் மூட்ட மூட்டையா பூண்ட எடுத்ததுக்கு போயி ராசாவை பாத்தான். மேலே படிச்ச வெங்காய யாவாரிக்கு நடந்த அத்தனை விசாரணையும் பூண்டு யாவாரிக்கும் நடந்துச்சு. வச்சுட்டு போ சாப்புட்டி பாத்துட்டு உனக்கு போன் பண்ணுறேன்னு அவனை அனுப்பி வச்சாரு ராசா.
ஒரு நாளு அவனுக்கும் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. அவனும் வெங்காய யாவாரிக்கு மாறி நம்மளுக்கும் நெறையா பரிசு தரப்போராருன்னு ஏகப்பட்ட கற்பனையோடு போனான்.
"தம்பி உங்க பூண்டை சாப்பிட்டு பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது. வெங்காயத்த விட இது இன்னும் நல்லாருக்கு...அதுனால உங்களுக்கு வெங்காய யாவாரிக்கு கொடுத்ததை விடை வெல உயர்ந்த பரிசை இந்த மூட்டைக்குள்ள வச்சுருக்கேன். எடுத்துக்கங்க"-ன்னு ரெண்டு மூட்டையை கொடுத்தாரு...
பூண்டு யாவாரி அடடா நம்மளுக்கு அதிஷ்டம் அடிச்சுருச்சுன்னு நெனச்சுக்கு மூட்டைய பிரிச்சு பாத்தான். அங்கே....அவ்வளவும் வெங்காயம்.
"என்ன ராசா, வெல உயர்ந்த பரிசுன்னு சொன்னீங்க..ஆனா, எல்லாம் வெங்காயமா இருக்கு...."-ன்னு பரிதாபமா கேட்டான்.
அதுக்கு ராசா.......
"தங்கம், வைரத்த விட எங்க நாட்டுல இப்ப வெல உயர்ந்த, வெல மதிப்பில்லாத பொருளு இந்த வெங்காயந்தான். அதான் இதை கொடுத்தேன்"-ன்னு சொன்னாரு....
நீதி; இன்று நாட்டில் விலை மதிக்க முடியாத பொருளாக வெங்காயம் இருக்கிறது.
Tweet |
ராசா... வெவரமான ராசா...
பதிலளிநீக்குஎல்லாம் சரி,வெங்காயம்னா என்னா?
பதிலளிநீக்குவெங்காய வெடி
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய வெங்காயக்கதை
பதிலளிநீக்குஇனி எந்தப்பயலும் அந்த ராசாகிட்ட போய் எதையும் விக்கமாட்டான்!
பதிலளிநீக்குவெங்கயதால ஆட்சி மாற்றம் ஏற்படுமா
பதிலளிநீக்குahhahahahaahahha
பதிலளிநீக்கு:D
பதிலளிநீக்கு