என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், நவம்பர் 06, 2013

4 ஏன் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்?




ருத்துக்கணிப்பை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் ஒருபுறமும், தடை செய்யக்கூடாது தேர்தலில் தோற்பவர்கள்தான் தடை விதிக்க கோருவார்கள் என்று பாரதிய ஜனதா மறுபுறமும் நின்று கூவுகின்றன....அப்படியா மக்கள் மனசை மாற்றிவிட போகிறது இந்த கருத்துக்கணிப்புகள் என்று அலசுவோமா?
முந்தைய தேர்தல்களில் கருத்து கணிப்புகள் எடுபட்டும் இருக்கின்றன. பொய்த்து போயும் இருக்கின்றன. 
எப்படி எடுக்கப்படுகிறது இந்த கருத்துகணிப்புகள்?
ஒரு நாடாளுமன்றத்தொகுதியில் குறைந்த பட்சமாக ஐந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவ்வளவு பேரிடமும் எடுக்கப்படுவதில்லை. அது சாத்தியமும் இல்லை.
ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருத்துக்கனிப்புகளுக்காக ஊடகங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் போகும்போது...வாக்காளர்கள் காங்கிரஸ் அபிமானிஎன்றோ....பாரதிய ஜனதா கட்சி அபிமானிஎன்றோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரசின் ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அவர் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வருமென்றும், பா.ஜ.க-ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அடுத்து பா.ஜ.க- தான் ஆட்சிக்கு என்றும் சொல்வார்கள்.
அப்படி எடுக்கப்பட்ட கணிப்பை இவர்களும் தத்தம் பத்திரிகைகளில் வெளியிட்டு விடுவார்கள்.தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு சாதகமாக கூட ஊடங்கங்கள் கணிப்பை மாற்றி விடுவார்கள்.
இது சரிதானா?
ஐந்து கட்சம் வாக்காளர்களின் மனநிலையை வெறும் ஆயிரம் பேர் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும்? அல்லது பிரதிபலிக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் இங்கே பயன்படுத்த முடியாது. சோறு என்பது ஒரே தண்ணீரில் ஒரே வெப்பத்தில், ஒரே கொதிநிலையில் சீராக வேகக்கூடியது.
ஆனால் மக்கள்?
ஒரே தெருவில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையை கூட நம்மால் கணிக்க முடியாது. வேட்பாளர், ஜாதி, இலவசங்கள், பணம், கடைசி நேர பிரச்சார வியூகங்கள் மூலம் கூட மக்களின் மன நிலை மாறிவிடும். முன்பு ஊடகங்களில் இந்த கட்சிக்குத்தான் என் வாக்கு என்று சொன்னவர்கள் கூட மாற்றி வாக்களித்து விடுவார்கள். எனவே, இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது.
கருத்து கணிப்பினால் சாதக பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி என்று பார்த்தால்......
இந்த தொகுதியில் இந்த கட்சி ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்தால்....கருத்துக்கணிப்புபடி ஜெயிப்பதாக கூறப்பட்ட கட்சியினர் நாம்தானே ஜெயிக்கப்போகிறோம் என்று களப்பணியில் மெத்தனமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.... தோற்க்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் சோர்ந்து போகவும் வாய்ப்புண்டு.
அல்லது தோற்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட்டு களப்பணியாற்றி ஜெயிக்கவும் வாய்ப்புண்டு...
அடுத்து மக்கள்.....
கருத்து கணிப்பை உண்மையென நம்பி மக்களும் மனசு மாறும் சாத்தியமுண்டு....நம்ம தொகுதியில் இந்த கட்சிதானே ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்லியிருக்கிறது. நாமும் அந்த கட்சிக்கே வாக்களிப்போம்.எதற்காக தோற்கும் கட்சிக்கு வாக்களித்து நம் ஓட்டை வீணாக்குவானேன் என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருத்து கணிப்பை நம்பாதீர்கள் என்று கட்சிகள் அலறுகிறது.
மக்களின் இந்த மனநிலையை கெட்டியாக பிடித்து கொண்ட ஊடகங்கள் தங்களுக்கு பிடித்த கட்சியினர் ஜெயிக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செவ்வனே செய்து வருகிறார்கள். ஒருவேளை இவர்களின் கணிப்பு மாறிவிட்டால்....இலவசங்கள், பணம் அதிகமாக கொடுத்த கட்சி வென்று விட்டது. நாங்கள் வேட்பாளர், இலவசங்களை அறிவிக்கும் முன்பே கருத்து கணிப்பு எடுத்து விட்டதால் எங்கள் கணிப்பு மாறிவிட்டது என்ற ரீதியில் ஒரு அறிக்கை விட்டு மீசையில் மண் ஒட்டாமல் பார்த்து கொள்வார்கள்...ஒருவேளை இவர்களின் கணிப்பு தப்பி தவறி சரியாக இருந்துவிட்டால்...சொல்லவே வேணாம் அடுத்த தேர்தல் வரை இந்த விளம்பரத்தை வைத்தே ஓட்டிவிடுவார்கள்.
(கடந்த சட்டமன்ற தேர்தலின்போது எழுதப்பட்ட பதிவு. லேசான மாற்றங்களுடன்....)




Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. இது உண்மையில் சிக்கலான பிரச்சினை தான்..கருத்துக்கணிப்பு மக்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறதா என்பது, அந்த பத்திரிக்கையின் நடுநிலைமையைச் சார்ந்ததாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஒரு பத்திரிக்கையின் கணிப்பை மட்டுமே நம்பி, கட்சி சாரா வாக்காளர்கள் முடிவெடுப்பதில்லை. பொதுவாகவே ஒரு கட்சிக்கு ஆதரவான அல்லது எதிரான மனநிலை மக்கள் மத்தியில் தேர்தலுக்கு முன்பே உருவாகி விடுகிறது. இந்தக் கருத்துக்கணிப்புகள், அதை வெளிக்கொண்டுவரவே முயல்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. இப்போது காங்கிரஸுக்கு எதிரான மனநிலை பரவலாக எல்லா மட்டத்திலும் உள்ளது. எனவே தான் அது அலறுகிறது. இன்னும் முடிவெடுக்காத, ஆனால் தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகும் வாக்காளர்களின் ஓட்டை, இந்த கருத்துக்கணிப்புகள் தன் பக்கம் திருப்பும் என்ற ஆசையில் பாஜக, இதை ஆதரிக்கிறது...இருப்பினும், கருத்துக்கணிப்பை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்ற வாதத்தை நான் ஆதரிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  4. எப்போதோ எழுதப்பட்டாலும் இப்போதும் பொருந்தி வருகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.