என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஆகஸ்ட் 23, 2010

5 தயவு செய்து யாரும் என்னை திட்டாதீர்கள்

கீழே இருக்கும் கவிதையை படித்துவிட்டு இதுக்கு பேர் கவிதையா என்று தயவு செய்து என்னை திட்ட வேண்டாம்.


நிழல் தர மரங்களின்றி
சாலைகளெல்லாம் வெறிச்சோடி...
மரங்களெல்லாம் அழகிற்காக
வீட்டின் மாடியில் போன்சாயாய்.....
--------------------------------------------------------


வண்ணத்துபூச்சிகள் சுதந்திரமாய்...
பூக்களின் மேல்....
ஓணான்கள் பிரச்சினையின்றி
வேலியின் மேல்....
சிறுவர்களெல்லாம் கணினியின் முன்
விளையாடியபடி.
------------------------------------------------------------
நீர்தொட்டிக்குள் மீன்கள்
நீந்த கண்டிருக்கிறேன்.
இதென்ன பூந்தொட்டிக்குள்
மீன்கள் நீந்துகின்றன..
ஓ.....உன் கண்கள்.

-------------------------------------------------------------
அமாவாசையன்றும் நிலா தரிசனம்
மொட்டை மாடியில் நீ

Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. உங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாருங்களேன்... இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்...

    பதிலளிநீக்கு
  2. இது என் கன்னி முயற்சி. இதை கவிதை என்று நானே சொல்லக்கூடாதல்லவா அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு குந்தவை மேடம். மேலும் கருத்து சொன்ன ஆசிக் அவர்களுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா25 ஆக., 2010, 1:43:00 AM

    good one continue to express your thoughts.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.