என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 03, 2010

14 அப்படி என்ன பேசினார் ஆர்யா-வீடியோ இணைப்பு

ர்யா அப்படி பேசியிருக்கக்கூடாது, அவர் பேசியது தப்பு, அவர் மன்னிப்பு கேட்கும்வரை ஓயமாட்டோம் என்று ஆளாளுக்கு ஆர்யாவுக்கு எதிராக இப்போது கிளம்பியிருக்கிறார்கள்.  நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை என்பதை பணிவன்போடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தங்களை இதயசுத்தியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
என்று ஆர்யா கூறியுள்ளார். சரி அப்படி என்னதான் கூறினார் ஆர்யா என்று  மலையாளம் தெரிஞ்சவங்க இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நமக்கு இந்த மலையாளம் ஒரு எழவும் புரியவில்லை. அப்படியே அவரு என்ன சொன்னாருன்னு நமக்கும் பின்னூட்டத்துல சொல்லிருங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. தமிழில் பாட்டும் டான்சும் பைட்டும் கொஞ்சகோண்டு நடிப்பும் இருக்கும், மலையாளத்தில் நடிப்பு மட்டும் தான் இருக்கும், எனக்கு நடிக்க வாய்ப்புள்ள சின்ன ரோல் மலையாளத்தில் கொடுத்தால் செய்து தருவேன் என்கிறார்.

    மொழியை ஒப்பிட்டு பேசுவது தேவையற்ற பேச்சு. வளரும் நடிகர் இதைத் தவிர்த்திருக்கலாம். அவரு ஒரு மலையாளின்னு இப்பதான் எல்லோருக்குமே தெரிகிறது. இவரே தான் நான் கடவுள் படத்தில் நடித்தார், அதுல என்ன டான்சும் பைட்டும் இருந்தது ? பாலா போன்றவர்கள் டென்சன் ஆவார்களா இல்லையா ?

    பதிலளிநீக்கு
  2. என் நண்பர்களுக்கு மழையாளத்துல நடிக்கனுமுனா ரொம்ப பயம்..ஏன்னா தமிழ்ல பாட்டு பாடி டான்ஸ் ஆடிட்டு கொஞ்சமா நடிச்சா போதும்.ஆனா மழையாளத்துல நல்லா நடிக்கணும்.அப்படி கொஞ்சமா நடிக்கிறமாதிரி வாய்ப்பு கிடைச்சா மழையாளத்துல நடிக்கிறேன்,..

    (எப்படி நம்ம மொழிபெயர்ப்பு)

    பதிலளிநீக்கு
  3. இப்ப திரையுலகத்துல் இத்தான் ஹாட் டாபிக்காம்ல...வீடியோ இணைப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,பட்.. மலையாளம்தான் ஒன்னும் புரியல...

    பதிலளிநீக்கு
  4. சூழலுக்கு அடிமையாகிப்போன ஆர்யாவுக்கு அனுதாபங்கள்.

    கண்ணா!நாங்களும் மலையாள திரையுலகம் பார்த்துகிட்டுத்தான் வருகிறோம்.தமிழில் மலையாள நடிகைகள் நடிப்பதைப்போட்டு ஊடகம் காசு பார்ப்பதும் தமிழின் குத்துப்பாட்டுக்கு அங்கேயும் மகிழ்வாக ஆடுவதும் மட்டுமே உண்மை.

    ஆர்யா!சொல்வதெல்லாம் கறுப்பு வெள்ளை மலையாளத் திரைப்படக் காலங்களை நினைத்துக்கொண்டு இருக்கலாம்.ஆனாலும் நடிப்பு என்ற இமயமலை அப்பொழுதும் அபிநயம்ன்னா என்னன்னு தமிழில் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தது.

    பதிலளிநீக்கு
  5. பாஸ் இருங்க! நம்ம சகீலா சேசிகிட்ட கேட்டுட்றேன்!!!

    பதிலளிநீக்கு
  6. மலையாளிகளுக்கு எப்பவுமே தமிழர்கள் நாலே ஆகாது .பையனும் வேற மலையாளியா அதான் .

    பதிலளிநீக்கு
  7. ஆஹா...மலையாளத்துக் குட்டிகள் எதற்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றார்கள் என்று நமக்குத் தெரியாது.

    அதுவும் அனைத்தையும் களைந்துவிட்டு நடிப்பார்கள் துட்டுக்கொடுத்தால்.

    matter படம் என்றால் அது mallu movies தான்.

    ஒரு matter படத்தில் நடிக்கும் ஒரு நடிகன் இப்படித்தான் பேசுவான்.ஏன்னா அவன் அம்மா ஒரு மேட்டர் பட நடிகை.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா3 டிச., 2010, 8:56:00 PM

    தமிழில் நடிக்கும் என் நண்பர்களுக்கு மலையாளத்தில் நடிப்பதென்றால் ரொம்ப பயம். ஏனென்றால், தமிழில் அதிகமாக டான்சும், அதிகம் பைட்டும், கொஞ்சமாக நடிப்பு மட்டுமே நாங்கள் செய்வது. ஆனால் மலயாளத்தில் நடிக்கும்போது அதிகமாக நடிப்பை காட்ட வேண்டியது வருமே என்கிற பீலிங். தமிழை போல மலையாளத்திலும் கொஞ்சமாக நடிப்பை காட்டுவது மாதிரி படம் கிடைத்தால் நான் நடிப்பேன்.

    இதுதான் அண்ணன் பேசியது, நமக்குத்தான் தமிழன் என்ற பீலிங் இல்லையே. அதனால் இது போன்ற பேச்சுகளை கேட்டுதான் ஆக வேண்டும்

    M. George
    Kanyakumari

    பதிலளிநீக்கு
  9. ஏண்டா பன்னாட.. நீ அந்த மாதிரி கதையத்தானடா தேர்ந்தெடுக்கிற...குத்து பாட்டும், பைட்டும் இருக்குற படமா எடுத்து கோடி கோடியா வாங்க ஆசைப்படுற.. ஏண்டா நாயே நீ இங்க பேசும் தமிழ்ல எவ்ளோ ஆங்கிலம் கலந்து பேசுவ.. மலையாளம் மட்டும் எப்படி இப்படி தெளிவா வருது.. எதுக்கு மே நீ காரணம் இல்ல.. இந்த நடிகன் சூ.... பின்னாடி தமிழர்களா செருப்பால அடிச்சாக்கூட திருந்தமாட்டானுங்க.. தலைவனது கீழ்மையே.. மக்களின் கீழ்மைநிலை. அவ்வண்ணமே கலையும்.

    பதிலளிநீக்கு
  10. விக்கிலிக்ஸ் மாதிரி ஒன்னு விடுறது இல்ல ஆதரத்தோடு பதிவு போட்டரிங்க. இந்திரன் கதை உங்களுடைய லிங்க் தன பல இடத்தில். நன்றி

    பதிலளிநீக்கு
  11. ஆர்யா பேசியதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை. பல தமிழ் படங்கள் அப்படித்தானே உள்ளது?

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.