ஆட்சி பீடத்தில் ஜனதா கட்சி அமர்ந்து விட்டபோதிலும் அதன் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் மந்திரிசபையில் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது. சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் இந்திரா காந்தியையும், சஞ்சய் காந்தியையும் எப்படி பழிவாங்குவது என்று யோசித்தபடி இருந்தார்களே தவிர ஆக்கபூர்வமாக செயல்படவில்லை.
ஒருநாள் மந்திரி ராஜ்நாராயணன் நிருபர்களை அழைத்தார். "நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?" என்று கேட்டார். நிருபர்கள் விழித்தார்கள். ராஜ்நாராயணன் ஒரு புன்னகையுடன் "உங்களுக்குத் தெரியாது. காரணம் நான் பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் கடைப்பிடித்த முறையைப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.
"அந்த முறை என்ன என்று கூறுங்களேன். உலக மக்கள் எல்லோரும் பயன் அடைவார்கள்" என்று ஒரு நிருபர் கூறினார். "அதுவும் சரிதான்" என்று கூறிய ராஜ்நாராயணன் தொடர்ந்து சொன்னார்:
"காலையில் எழுந்ததும் பலர் காபி _ டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது" என்று கூறி நிறுத்தினார். "அப்படியானால் நீங்கள் காபி, டீ குடிப்பதில்லையா?" என்று ஒரு நிருபர் கேட்டார். "நோ... நோ... நான் குடிப்பது வேறு!" என்றார். "அதைத்தான் சொல்லுங்களேன்" என்று நிருபர்கள் வற்புறுத்தினார்கள். "சொல்லத்தான் போகிறேன். எல்லோரும் பயன் அடையவேண்டும் அல்லவா?" என்று கூறிய ராஜ்நாராயணன், குரலை தாழ்த்திக் கொண்டு, "தினமும் காலையில் என் சிறுநீரில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.
அதிர்ச்சியிலிருந்து நிருபர்கள் மீளவில்லை. என்றாலும், ஒரு நிருபர் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, "எவ்வளவு நாட்களாக நீங்கள் இந்த அமுதத்தை குடித்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். "அமுதம் என்று நீங்கள் கேலியாக குறிப்பிட்டாலும் சரி, உண்மையாக உணர்ந்து சொன்னாலும் சரி, என்னைப் பொருத்தவரை அது அமுதம்தான். அதை கழிவுப் பொருள் என்று நினைப்பது சரியல்ல. ரத்தத்தை சுத்தீகரிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு" என்றார், ராஜ்நாராயணன்.
"இன்று அருமையான செய்தி கிடைத்துவிட்டது!" என்று நினைத்த நிருபர்கள், அதை தங்கள் அலுவலகங்களுக்குத் தெரிவிக்க அவசரமாகக் கிளம்பினார்கள். "கொஞ்சம் பொறுங்கள்!" என்றார், ராஜ்நாராயணன். "இன்னும் என்ன `செய்தி' சொல்லப்போகிறாரோ" என்று நிருபர்கள் உட்கார்ந்தனர். "நான் கூறிய மருந்தின் மகிமை, என் குரு உள்துறை மந்திரி சரண்சிங்குக்கும் தெரியும். அவரும் அதை தினமும் அருந்தி பயன் அடைந்து வருகிறார்" என்று கூறிய ராஜ்நாராயணன், "இந்த மருத்துவ முறையைப் பின்பற்றும் இன்னொருவர் பெயரையும் கூறப்போகிறேன். அவர் பெயரைக் கேட்டால் அப்படியே திகைத்துப்போய் விடுவீர்கள்" என்று கூறி நிறுத்தினார்.
"அவர் யார் என்று கூறுங்கள். சஸ்பென்சாக நிறுத்தி, எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். செய்தி கொடுக்க நேரமாகிறது" என்று அவசரப்படுத்தினார் ஒரு நிருபர். "பொறுங்கள், பொறுங்கள். சிறுநீர் அருந்துவோர் பட்டியலில் நமது பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் இருக்கிறார்கள். எண்பது வயதுக்கு மேலும் அவர் எவ்வளவு தெம்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார் பாருங்கள். எல்லாம் இந்த மருந்தின் மகிமை!" என்றார், ராஜ்நாராயணன். மறுநாள் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியது. "சிறுநீர் குடிக்கும் இந்திய மந்திரிகள்" என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டு மேல்நாட்டு பத்திரிகைகள் இந்தியாவின் மானத்தை வாங்கின.
ராஜ்நாராயணன் இப்படி பேட்டி அளித்தது, மொரார்ஜி தேசாய்க்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. "கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை இல்லையா?" என்று ராஜ்நாராயணனிடம் கடிந்து கொண்டார். "நான் உண்மையைத்தானே சொன்னேன். நாம் மட்டும் பலன் அடைந்தால் போதுமா? உலகமே பலன் அஆட்சி பீடத்தில் ஜனதா கட்சி அமர்ந்து விட்டபோதிலும் அதன் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால் மந்திரிசபையில் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது. சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் இந்திரா காந்தியையும், சஞ்சய் காந்தியையும் எப்படி பழிவாங்குவது என்று யோசித்தபடி இருந்தார்களே தவிர ஆக்கபூர்வமாக செயல்படவில்லை.
ஒருநாள் மந்திரி ராஜ்நாராயணன் நிருபர்களை அழைத்தார். "நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?" என்று கேட்டார். நிருபர்கள் விழித்தார்கள். ராஜ்நாராயணன் ஒரு புன்னகையுடன் "உங்களுக்குத் தெரியாது. காரணம் நான் பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் கடைப்பிடித்த முறையைப் பின்பற்றுகிறேன்" என்று கூறினார்.
"அந்த முறை என்ன என்று கூறுங்களேன். உலக மக்கள் எல்லோரும் பயன் அடைவார்கள்" என்று ஒரு நிருபர் கூறினார். "அதுவும் சரிதான்" என்று கூறிய ராஜ்நாராயணன் தொடர்ந்து சொன்னார்:
"காலையில் எழுந்ததும் பலர் காபி _ டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது" என்று கூறி நிறுத்தினார். "அப்படியானால் நீங்கள் காபி, டீ குடிப்பதில்லையா?" என்று ஒரு நிருபர் கேட்டார். "நோ... நோ... நான் குடிப்பது வேறு!" என்றார். "அதைத்தான் சொல்லுங்களேன்" என்று நிருபர்கள் வற்புறுத்தினார்கள். "சொல்லத்தான் போகிறேன். எல்லோரும் பயன் அடையவேண்டும் அல்லவா?" என்று கூறிய ராஜ்நாராயணன், குரலை தாழ்த்திக் கொண்டு, "தினமும் காலையில் என் சிறுநீரில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.
ராஜ்நாராயணன் ஏற்கனவே "அரசியல் கோமாளி" என்று பெயர் எடுத்தவர். அவர் உண்மையாகவே கூறுகிறாரா? அல்லது தமாஷ் செய்கிறாரா என்று திகைத்தார்கள். "என்ன எல்லோரும் இப்படி வாயடைத்துப் போய்விட்டீர்கள்? நான் விளையாடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாகச் சொல்கிறேன். இது நிஜம், நிஜம், நிஜம்!" என்றார்.
டையவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் கூறினேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார், ராஜ்நாராயணன். ஏற்கனவே இந்திரா காந்தியை கொடுமைப்படுத்தியதால், ஜனதா அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு அடைந்திருந்தனர். ராஜ்நாராயணன் அளித்த பேட்டியால், ஜனதா கட்சியின் செல்வாக்கு மேலும் சரிந்தது.
இதற்கிடையே இந்திரா காந்தியை ஷா கமிஷன் நேரில் அழைத்து விசாரித்தது. நீதிபதி கேட்ட எந்தக் கேள்விக்கும், இந்திரா பதில் அளிக்க மறுத்தார். "நான் பிரதமராகப் பதவி ஏற்கும்போது, ரகசியக் காப்பு பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன். எனவே, பதில் அளிக்க இயலாது" என்றார். ஷா கமிஷன் தனது 500 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்தது. அதில், நெருக்கடி நிலையின்போது நடந்த பல அத்துமீறல்கள் நடந்தது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி மீது குறிப்பிட்ட எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை.
இந்த சமயத்தில், மொரார்ஜி தேசாய் மகன் காந்தி தேசாய் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று, மொரார்ஜிக்கு சரண்சிங் கடிதம் எழுதினார். "வெறும் வதந்தியை மட்டும் அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தமுடியாது" என்று தேசாய் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பதவியை சரண்சிங்கும், சுகாதார அமைச்சர் பதவியை ராஜ்நாராயணனும் ராஜினாமா செய்தனர். இதனால், ஜனதா கட்சி பிளவுபட்டது.
மந்திரிசபை கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும், சரண்சிங்குக்கும் சமரசம் செய்து வைக்க ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். தனக்கு உள்நாட்டு இலாகாவுடன், துணைப்பிரதமர் பதவியும் வேண்டும் என்றும், தன்னுடைய சீடர் ராஜ்நாராயணனுக்கு மீண்டும் மந்திரி பதவி தரவேண்டும் என்றும் சரண்சிங் வற்புறுத்தினார்.
துணைப்பிரதமர் பதவி தருவதாகவும், ஆனால் உள்நாட்டு இலாகாவைத் தர முடியாது என்றும் கூறிய தேசாய் சரண்சிங், ஜெகஜீவன்ராம் ஆகிய இருவரையும் துணைப் பிரதமராக நியமித்தார். சரண்சிங்குக்கு நிதி இலாகா கொடுக்கப்பட்டது. ராஜ்நாராயணனுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாது என்று தேசாய் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்நாராயணன், தேசாய் ஆட்சியைக் கவிழ்ப்பதாகச் சபதம் செய்தார்.
ஜனதா கட்சியை விட்டு விலகி, "ஜனதா (எஸ்)" என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். ஜனதா கட்சியை சேர்ந்த 34 எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் ரபிராய், ஜானேஸ்வர் மிஸ்ரா, ஜக்பீர்சிங் ஆகியோரும் ஜனதாவை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தனர். இதனால் மொரார்ஜி தேசாய் மந்திரிசபை ஆட்டம் கண்டது.
தொடரும்
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6, 7நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....
Tweet |
ஃஃஃஃஃமொரார்ஜி தேசாய் மகன் காந்தி தேசாய் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. ஃஃஃஃ
பதிலளிநீக்குஇன்றும் பல புது விசயங்களை அள்ளித் தந்து போகிறிர்கள் மிக்க நன்றி சகோதரம்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
அடுத்த பதிவுக்காய் எதிர்பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஐஐஐஐ எனக்குத் தான் சுடு சோறு...
பதிலளிநீக்குNice! write more! :-)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்,,தொடருங்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்
பதிலளிநீக்குடக்கர் போஸ்ட்...சிறுநீர் மருத்துவம் என்னும் ஒரு நுலெ இருக்கிறது..இதை எழுதியவர் ஸ்வாமி சிவானந்தா
பதிலளிநீக்குதமிழ்மணம் டாப் 20 யில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்..என்னுடைய பிளாக்கில் பிரபல பதிவர்கள் லிஸ்டில் உங்கள் பிளாக்கையும் இணைத்துள்ளேன்
பதிலளிநீக்குதொடருங்கள்
பதிலளிநீக்கு