என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 20, 2011

12 பெங்களூரில் ஜெயலலிதா....ஓ.பன்னீர்செல்வம் ரெடியா?


அனைவரும் எதிர்பார்த்ததைப்போலவே திருச்சி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், வாக்குவித்தியாசம் கடந்த பொதுத்தேர்தலை விட அதிகம்.கடந்த பொதுத்தேர்தலில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்தும், அண்ணா.தி.மு.க.,வேட்பாளர் மரியம் பிச்சை 77,492 வாக்குகள் பெற்று 7,178 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றிருந்தார். ஆனால், இப்போது இருந்த கூட்டணி கட்சிகளையெல்லாம் கழற்றிவிட்டுவிட்டு அண்ணா.தி.மு.க., 68,804 வாக்குகள் பெற்று 14,608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், கடந்த முறை கூட்டணிகளுடன் களம் கண்ட தி.மு.க., வேட்பாளர் நேரு 70,312 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த முறை தனித்து போட்டியிட்டு  54,196 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.இதன்மூலம் தி.மு.க., 16,000 வாக்குக்களையும், அண்ணா.தி.மு.க., 9,000 வாக்குகளையும் இழந்திருக்கிறது. இரு கட்சிகளுக்கும், கூட்டணி கட்சியினர் விலகல் அல்லது விலக்கல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. கூட்டணி கட்சி இல்லாமல் அண்ணா.தி.மு.க.,14,000 வாக்குகள் வித்தியாசம் காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

அதேநேரம்,  பாண்டிச்சேரி இந்திரா நகர் தேர்தலில் அங்குள்ள ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 15,503 வாக்குகள் பெற்று, 8400 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதே தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.,கூட்டணியுடன் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 20,685 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இப்போது அண்ணா.தி.மு.க.,இல்லாமல் 5,000 வாக்குகளை இழந்ததாக தெரிந்தாலும், அண்ணா.தி.மு.க., வெறும் 1500 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. அப்படியானால் மீதி ஓட்டு காங்கிரசுக்கு போயிருக்கிறது. இது ரங்கசாமிக்கு பின்னடைவுதான்.

---------------------------

நீண்ட இழுபறிக்குப்பின் சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜராக பெங்களூரு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. உச்சநீதிமன்றத்தின் குட்டுக்கு பிறகே நேரில் ஆஜராகியுள்ளார்.
அதாவது தலையில் குட்டுப்பட்டு நீதிக்கு தலைவணங்கியுள்ளார் ஜெயா....பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில், திருச்சி இடைத்தேர்தல் வெற்றியையும் சேர்த்து கொண்டாடி மகிழலாம் ரத்தத்தின் ரத்தங்கள்...

ஒருவேளை ஜெயாவுக்கு பாதகமான தீர்ப்புவந்தால்... பணிவு புகழ் பன்னீர்செல்வம் தயாராக இருக்கவேண்டியதுதான் பொம்மை முதல்வராக.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. தமிழ்மணத்தை விட்டு போறதா சொன்னீங்க, இன்னும் இருக்கீங்க :-)))எல்லாம் ஒரு உதாறு தான் இல்ல

    பதிலளிநீக்கு
  2. //மதுரை மாக்கன் said...

    தமிழ்மணத்தை விட்டு போறதா சொன்னீங்க, இன்னும் இருக்கீங்க :-)))எல்லாம் ஒரு உதாறு தான் இல்ல //


    த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிக‌ளுக்கு நான் அனுப்பிய‌ மெயில்.

    From: VANJOOR
    Date: 2011/10/19
    Subject: GOODWILL

    To: admin@thamizmanam.com

    Dear Administrators,

    After I have registered the following comment

    83.VANJOOR on October 18th, 2011 11:43 am

    in link http://blog.thamizmanam.com/archives/359

    HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

    I was delighted to receive positive response and support from majority of muslim Bloggers to my call and agreed in good faith to forget and put an end to this unfortunate episode .

    So let us shake hands in goodwill with goodwill for goodwill.

    Your acknowledgement regarding this much appreciated.


    Regards.
    vanjoor

    http://vanjoor-vanjoor.blogspot.com/

    E&O.E.

    83.VANJOOR on October 18th, 2011 11:43 am
    in link http://blog.thamizmanam.com/archives/359

    HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்

    • VANJOOR on October 18th, 2011 11:43 am

    திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்க‌த்திற்கு நன்றி.

    அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வரஹ்)

    ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாச‌க‌ர்க‌ளே !!

    இனிமேலும் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌மிழ்ம‌ண‌த்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இட‌ம் பெறாது என பரிபூரணமான ந‌ம்பிக்கையுடன்

    மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த‌ பாதையில் பயணிப்போம்.

    நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வ‌ழக்க‌ம் போல் இருக்க‌ட்டும்.

    த‌ன்மான‌ உண‌ர்வுட‌ன் இதுவ‌ரையிலும் த‌மிழ்ம‌ண‌த்திலிருந்து தானாகவே வில‌கிக்கொண்ட‌ அனைத்து சக‌ முஸ்லீம் ப‌திவ‌ர்களும் மீண்டும் த‌மிழ்ம‌ண‌த்தில் இணைந்து கொள்ளுங்க‌ள்.

    ந‌ல்லெண்ண‌த்தின் அடிப்ப‌டையில் நேச‌ க‌ர‌ம் நீட்டும் செய‌லாக‌ இதுகாறும் தானாக‌வே வில‌கிக்கொண்ட‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை
    த‌மிழ்ம‌ண‌ம் அடையாள‌ம் க‌ண்டு

    த‌மிழ்ம‌ண‌ம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.ச‌ங்க‌ர‌பாண்டிய‌ன் உள்ளிட்ட‌ த‌மிழ்ம‌ண‌ நிர்வாகிக‌ளின் நேச‌க்க‌ர‌த்தை வலுவூட்ட‌லாமே ..

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    .

    பதிலளிநீக்கு
  3. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத் தானே வெற்றி.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மனத்துல இருந்து மாப்பு கேட்கலையே பாசு. தமிழ்மனத்துல இருந்து விலகிப் போங்கய்யான்னு சொல்லிட்டாங்க. விலக வேண்டியது தான :-)

    நீங்களா கேட்டகறீங்க, நீங்களா மன்னிச்சிட்டதா சொல்றீங்க. எதுக்கு கேட்கனும், மூக்கு அறுபடனும். இப்ப நாட்டாமை பண்ற நீங்க அப்ப எங்க போனீங்க பாசு. சிந்திச்சு செயல்படுங்க

    சும்மா ஊளை மிரட்டல் விட்டு எங்கள மாதிரி ஆட்கள கட்டுப்பேத்தினது தான் மிச்சம்

    பதிலளிநீக்கு
  5. நாளைக்கும் வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.தண்டனை எல்லாம் கிடையாது.திருப்பி ஒப்படைத்து,அபராதமும் கட்டச் சொல்லுவார் நீதிபதி!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. எதிர்பார்த்த முடிவு தான்!

    பதிலளிநீக்கு
  7. //ஒருவேளை ஜெயாவுக்கு பாதகமான தீர்ப்புவந்தால்... பணிவு புகழ் பன்னீர்செல்வம் தயாராக இருக்கவேண்டியதுதான் பொம்மை முதல்வராக..... ///

    ரஹீம் இன்னும் அரசியலை கொஞ்சம் வேறு கோணத்திலிருந்து பாருங்க..
    ஜெயா இன்னிக்கு வெளிய வந்திடும்....
    #காரணங்கள் நெறைய இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. மொதல்ல அம்மா ராஜினாமா செய்யுராங்களான்னு பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  9. அ.சந்தர் சிங். has left a new comment on the post "தனித்துப்போட்டி...ஜெயிக்கப்போவது யாரு?-ஒரு பரபர அல...":

    """"தவறான கணிப்பு.தங்கள் கணிப்பு பொய்யாகிப் போகும்.அனைத்து பகுதிகளிலும் அதிமுக வே முன்னிலை பெரும்.பொறுத்திருந்து பாருங்கள்"""".
    இந்த கமெண்ட் நான் உங்களுக்கு செப்.25 அன்று உங்கள் தளத்தில் என்னுடைய பின்னூட்டமாக போட்டிருந்தேன்.இப்பொழுது அதுதான் உண்மையாக இருக்கிறது.நீங்கள் எனன வேண்டுமானாலும் எழுதுங்கள்.ஆனால்,நடைமுறை சாத்தியத்தை எண்ணி எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.