என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, மார்ச் 12, 2011

38 மைக் இல்லாமலே நாங்க கேட்போம்ல...


 அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் ஆலோசனை: மதிமுக, இ.கம்யூ. அதிர்ச்சி 

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி அதிர்ச்சி ஆகிட்டே இருப்பீங்க  ...தேர்தல் முடியறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுங்க....

==================================


ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

செல்வப்பெருந்தகை மாதிரி இடையில் ஓடிப்போகாத ஆளுங்களை போடுங்க

==============================

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கசப்புணர்வுடன் முடிவாகியுள்ளது: பி.ஜே.பி. கட்சியை சேர்ந்த எச்.ராஜா


அதான் யாரோடும் எந்த கசப்புணர்வும் வேண்டாமென்று தனியா நிற்க றீங் களோ?

=======================================

திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும்: தங்கபாலு

சி.பி.ஐ .- ரைடை சொல்லி மிரட்டிடுங்க...

=======================================


டெபாசிட் இழந்த விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் வழங்க முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்


ஆபத்துக்கு பாவமில்லை. இரட்டை  இலை  சின்னத்திலேயே நில்லுங்களேன்

==========================================


அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி


மதிமுக, கம்யூனிஸ்ட் தவிர எல்லோருக்கும் கொடுங்க...

==========================================


40 தொகுதியில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் : ஜெகன் மூர்த்தி


சார்...அப்படியே பி.ஜே.பி-யோட கூட்டணி போட்டுக்கங்களே...அவங்களுக்கும் துணை கிடைச்ச மாதிரி இருக்கும் 



Post Comment

இதையும் படிக்கலாமே:


38 கருத்துகள்:

  1. இன்னைக்கு யாரையும் வம்புக்கு இழுக்கலையா? ஹி ஹி பொழுது போகல்.. அதான் கேட்டேன்

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் மழை ( ??) என்னையும் நனைத்ததே !

    பதிலளிநீக்கு
  3. சி.பி.செந்தில்குமார் said... 2 இன்னைக்கு யாரையும் வம்புக்கு இழுக்கலையா? ஹி ஹி பொழுது போகல்.. அதான் கேட்டேன்///
    நேத்து என் பிளாக் ரணகளமா இருந்துச்சு....போதும் தல....நீங்க பாட்டுக்கு யாரையாவது கோர்த்து விட்டுட்டு போயிடுவீங்க...

    பதிலளிநீக்கு
  4. cheena (சீனா) said... இரண்டாம் மழை ( ??) என்னையும் நனைத்ததே !
    அய்யா நீங்களும் பாட்டுப்பாட ஆரம்பிச்சுட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  5. மொதல்'ல சிபியும் ஹசாலியும் அரசியல் பதிவுகள குறைச்சுக்கிரீன்களா??

    பதிலளிநீக்கு
  6. இம்புட்டு கடி கடிச்சா ரெண்டு பெரும் சேர்ந்து...பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க??

    இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  7. மழைவிடும் தூறலில் நான் நுழைந்தேன் தளத்தினுள்ளே.. வோட்டு குத்திட்டன். அரசியலுக்கும் நமக்கும் ரொம்பவே தூரம்.

    பதிலளிநீக்கு
  8. அண்ணே! நம்ம தனபாலுவுக்கும், கோபாலுக்கும் ஜே, கிட்ட சீட் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க.

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    பதிலளிநீக்கு
  9. வர வர அரசியல்வாதிகளை பார்த்தாத்தான் பாவமா இருக்கு.

    பாவம் நண்பரே! விட்டுவிடுங்கள். ( இதற்கு பேர் தான் அனுதாப அலை )

    பதிலளிநீக்கு
  10. பங்கீட்டை இழுத்தடிப்பதெல்லாம் அம்மாவின் ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  11. நக்கல்கள் தொடரட்டும் நண்பா அதாவது செய்வோம் ஹி ஹி!

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா12 மார்., 2011, 11:38:00 AM

    அரசியல் அவியலா இருக்கே

    பதிலளிநீக்கு
  13. மைந்தன் சிவா said... 6 மொதல்'ல சிபியும் ஹசாலியும் அரசியல் பதிவுகள குறைச்சுக்கிரீன்களா??/////
    கூட்டணி பல்டின்னு திரியுறாங்களே அரசியல்வாதிங்க...அவங்கள நிறுத்த சொல்லுங்க...நாங்க நிறுத்தறோம்...

    பதிலளிநீக்கு
  14. மைந்தன் சிவா said... 7 இம்புட்டு கடி கடிச்சா ரெண்டு பெரும் சேர்ந்து...பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க??
    என்னத்த பண்ணப்போறாங்க...கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பாங்க...

    பதிலளிநீக்கு
  15. தமிழ்வாசி - Prakash said... 9 அண்ணே! நம்ம தனபாலுவுக்கும், கோபாலுக்கும் ஜே, கிட்ட சீட் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க.
    இந்தகேள்விய பிரபல ஜோதிடர் கோழியூர் கோவிந்தனுக்கு அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  16. தமிழ் 007 said... 10 வர வர அரசியல்வாதிகளை பார்த்தாத்தான் பாவமா இருக்கு. பாவம் நண்பரே! விட்டுவிடுங்கள். ( இதற்கு பேர் தான் அனுதாப அலை )////
    நீங்க மதிமுக, கம்யூனிஷ்ட மனசுல வச்சுக்கு சொல்றீங்க...பாவம் தான் நாம என்ன பன்றது? ஜெயா மனசு வைக்கணுமே...

    பதிலளிநீக்கு
  17. தோழி பிரஷா said... மழைவிடும் தூறலில் நான் நுழைந்தேன் தளத்தினுள்ளே.. வோட்டு குத்திட்டன். அரசியலுக்கும் நமக்கும் ரொம்பவே தூரம்.////
    எவ்வளவுதூரம் தோழி....ஒரு நூறு கிலோமீட்டர் இருக்குமா?

    பதிலளிநீக்கு
  18. சென்னை பித்தன் said... 11 பங்கீட்டை இழுத்தடிப்பதெல்லாம் அம்மாவின் ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்!////
    அப்படியா சொல்லிக்கிறாங்க...யாரு சொன்னா நல்லநேரம் சதீஷ் தானே?

    பதிலளிநீக்கு
  19. Jiyath ahamed said... 12 அரசியல் நமக்கு தூரமா இருக்கு.
    ஆமாமாம்...கடல் கடக்கும் தூரம்

    பதிலளிநீக்கு
  20. விக்கி உலகம் said... 13 நக்கல்கள் தொடரட்டும் நண்பா அதாவது செய்வோம் ஹி ஹி!
    ஏதோ என்னால முடிஞ்சது

    பதிலளிநீக்கு
  21. ஆர்.கே.சதீஷ்குமார் said... 14 அரசியல் அவியலா இருக்கே////
    என்ன பண்றது? அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து கூட்டு வச்சாங்க....நான் என் பங்கிற்கு அவியல்,பொறியல் வைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....

    பதிலளிநீக்கு
  23. வேடந்தாங்கல் - கருன் said...

    கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ....

    வாங்க கருண்...இன்னைக்கு லேட்டு போல...ஏறுங்க பெஞ்சு மேல....

    பதிலளிநீக்கு
  24. //அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் ஆலோசனை: மதிமுக, இ.கம்யூ. அதிர்ச்சி//

    தனித்து போட்டியிட்டு டெப்பாஸிட் இழப்பது குறித்து மார்க்சிஸ்ட் மதிமுக, இ.கம்யூ. கூடி ஆலோசனை..

    இந்த செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. நல்ல அறிவுரைதான் சொல்லியிருக்கிங்க..

    பதிலளிநீக்கு
  26. மன்னிக்கனும் நண்பரே..
    தேர்வு மற்றும் பணியின் காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை..

    பதிலளிநீக்கு
  27. வசந்தா நடேசன் said... 26தனித்து போட்டியிட்டு டெப்பாஸிட் இழப்பது குறித்து மார்க்சிஸ்ட் மதிமுக, இ.கம்யூ. கூடி ஆலோசனை.. இந்த செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.////
    அதற்கு வாய்பிருப்பதாகவே படுகிறது

    பதிலளிநீக்கு
  28. # கவிதை வீதி # சௌந்தர் said... 27

    நல்ல அறிவுரைதான் சொல்லியிருக்கிங்க..////
    இதையும் அறிவுரை லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களா?
    ஓ....நீங்க ஆசிரியர் அல்லவா.....அப்ப சரிதான்

    பதிலளிநீக்கு
  29. # கவிதை வீதி # சௌந்தர் said...

    மன்னிக்கனும் நண்பரே..
    தேர்வு மற்றும் பணியின் காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை..

    அட...அத விடுங்க...முதல்ல மாணவர்களின் படிப்புதான் முக்கியம். இதெல்லாம் அப்புறம்தான்

    பதிலளிநீக்கு
  30. Speed Master said... ஹி ஹி

    இது என்னப்பா.....ஓ....சிரிச்சீங்களா? ஓகே...ஓகே...

    பதிலளிநீக்கு
  31. வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் விரட்டி இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  32. கமெண்ட்ஸ் கலக்கல்..ஜெ. ஏன் தான் இப்படிச் செய்கிறாரோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  33. நீங்க பேசாம ஏதாவது ஒரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்....!

    பதிலளிநீக்கு
  34. பாரத்... பாரதி... said... 34 வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் விரட்டி இருக்கீங்க...////
    நம்மதான் எந்த கட்சிக்கும் அனுதாபி இல்லியே?

    பதிலளிநீக்கு
  35. செங்கோவி said... 35 கமெண்ட்ஸ் கலக்கல்..ஜெ. ஏன் தான் இப்படிச் செய்கிறாரோ தெரியவில்லை..
    தோற்கத்தான். வேறென்ன சொல்ல.....

    பதிலளிநீக்கு
  36. பன்னிக்குட்டி ராம்சாமி said... 36 நீங்க பேசாம ஏதாவது ஒரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்....!
    பேசாம எப்படின்னே பிரச்சாரத்திற்கு போறது?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.