என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மார்ச் 31, 2011

6 புலன் விசாரணை பாகம்- 6

முந்தைய பாகங்கள் 



"ஹலோ மிஸ்டர் இன்ஸ்பெக்டர்....நீங்க பெரிய போலீஸ் அதிகாரியா இருக்கலாம்...அதுக்காக இன்னைக்கு சொசைட்டில பெரிய அந்தஸ்துல இருக்க என்கிட்டே எது வேணும்னாலும் கேக்கலாம்ன்னு நினைக்காதீங்க..."

"நான் ஒன்னும் தப்பா கேக்கலியே? எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் அடிப்படியிலதான் கேக்கிறேன்."

"திரும்ப திரும்ப அதையே  சொல்லிட்டு இருக்காதீங்க .....என் மேல குற்றம் சுமத்தும் அளவுக்கு அப்படி என்ன தகவல தெரிஞ்சுக்கிட்டீங்க?....உண்மையான கொலைகாரன கண்டு பிடிக்க முடியாட்டி வேலைய விட்டு போயிடுங்க....உங்களுக்கு கேச குளோஸ் பண்ணி மேலிடத்துல நல்ல பேரு வாங்கனும்ன்னு நினைச்சீங்கன்னா பெட்டி கேஸ்லையும் வழிப்பறி, பிக்பாக்கெட் கேஸ்லையும் எந்த இளிச்சவாயனாவது மாட்டிருப்பான். அதுல ஒருத்தன பிடிச்சு இவன்தான் கொலைகாரன்னு சொல்லி கேசை குளோஸ் பண்ணுங்க...போங்க...போயி அந்த வேலைய பாருங்க ...இன்னொரு தடவை இப்படி சொல்லிட்டு இங்க வராதீங்க...."

"சார் பேசி முடிச்சுட்டீங்களா? இப்ப நான் பேசறேன்....உங்களுக்கும் கொலையான நடிகைக்கும் கால்சீட் விசயத்துல வாக்குவாதம் வந்துச்சா?"

"ஆமாம்"

"அப்போ நீங்க என்ன சொன்னீங்க அவங்கள பார்த்துன்னு நினைவிருக்கா?"

"என்ன சொன்னேன்னு நீங்களே சொல்லுங்களே...."


"நன்றி கெட்டவ நீ....நான் அறிமுகப்படுத்தினேன்....இன்னைக்கு எனக்கு எதிரா பேசுறியா?உன்னை ஒழிக்காம விடமாட்டேன்.  நீ எப்படி பீல்டுல இருக்கேன்னு பார்த்திடுறேன்னு நீங்க அவங்கள மிரட்டியதா......"

ரெட்டி கலகலவென்று சிரித்தார்....

"இதைத்தான் எங்களுக்கு தகவல் கிடைச்சிச்சு தகவல் கிடைச்சிச்சுன்னு திரும்ப திரும்ப சொன்னீங்களா? சரியான சிரிப்பு போலீசா இருக்கீங்க....வழக்கமா அது ஆத்திரத்துல சொல்ற வார்த்தை....ஒரு பையன பார்த்து அவனோட அப்பா நீ செத்து தொலைடான்னு சொன்னா அவரு மனப்பூர்வமா சொல்லிட்டாருன்னு அர்த்தமா? நானும் அவள என் குழந்தை  மாதிரிதான் பார்த்தேன். அன்னைக்கு அவ பன்னிய குழப்பத்துல எனக்கு கோபம் வந்துடுச்சு...அதான் அப்படி சொன்னேன்.   இதப்போயி சீரியஸா எடுத்துக்கு"

"சார்...வழக்கமா நீங்க அப்படி சொன்னதுக்கப்புறம் அவங்க உயிரோட இருந்தாங்கன்னா பிரச்சினையே இல்லை. இப்ப செத்து போயிட்டாங்களே....அப்ப நாங்க எல்லோரையும் சந்தேகப்படும் மாதிரிதான் வரும்."

"நீங்க சந்தேகப்படுறது ஒன்னும் தப்பில்லை. ஆனா எல்லோரையும் சந்தேக படக்கூடாதுன்னு சொல்றேன்...சரி அன்னிக்கு நடந்தத சொல்றேன்...வேணாம்... நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்....நேரா விசயத்திற்கு வாரேன்...நான் அப்படி சொல்லிட்டு போன ரெண்டாவது நாளு சூட்டிங்காக வெளிநாடு போயிட்டேன். அங்கே போன அடுத்த நாளு எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தா நடிகை ஸ்ரீமதி....அதுல....சார் நடந்த குழப்பத்துக்கு நான் காரணமில்லை.என்னுடைய பி.ஏ. தயாளன் தான் காரணம்...உங்களிடம் கால்ஷீட் கொடுத்த   அதே தேதியில்  அந்த படத்துக்கும் கால்சீட் கொடுத்துட்டான். இதை கண்டுபிடிச்ச நான் அவனை என்னிடமிருந்து துரத்திட்டேன்னு சொல்லிருந்தா....அதோட அவள் மேல இருந்த கோபமெல்லாம் போயிருச்சு...அதுக்கப்புறம் நானே அவளுக்கு ரிப்ளை மெயில் அனுப்பினேன் .பரவாயில்லமா...நீ அந்த படத்துல நடி...நான் மத்தவங்க சம்பந்த பட்ட போர்சன முடிச்சுடுறேன். அப்புறம் உன் சம்பந்தப்பட்ட காட்சிகளா எடுக்கலாம்ன்னு....   சந்தேகமிருந்தா நீங்களே பாருங்க....."

தன் லேப்டாப்பை உயிர்பித்து மின்னஞ்சலை திறந்து காட்டினார்...

"சார்...அவங்களுக்கு குடும்பம் இருக்கா...அவங்கள..எங்கேருந்து நடிக்க அழைச்சுக்கு வந்தீங்க...."

"அவளுக்கு குடும்பம் இருந்தது...சமீபத்துலதான் அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்  இறந்தாங்க....ஒரு அண்ணன் மட்டும் கிராமத்துல இருக்காரு....ஆனா அவளுக்கும், அவ  குடும்பத்துக்கும் என்னைக்கு அவ நடிக்க வந்தாளோ....அன்னிக்கே தொடர்பு விட்டு போச்சு...யாரோடவும் பேச்சு வார்த்தையில்லை."

"அப்படியா...இப்ப அவ அண்ணன் எங்கே இருக்காரு..."

"புதுக்கோட்டை பக்கத்துல அரசர்குளம் என்ற கிராமத்துல....."

"ரொம்ப நன்றி சார்...."

----------------------------------------------------

போலீஸ் ஸ்டேசன்..

"என்னய்யா கேசு இப்படி இழுத்துக்கே போகுது....எதுக்கும் அவ பி.ஏ. வை கொஞ்சம் விசாரிச்சிடலாமா?"

"அவன் இப்ப எந்த மூலையில இருக்கானோ...."

"இங்கேதான் எங்கேயாவது இருப்பான்..அவன் அட்ரஸ் வாங்குறது ஒன்னும் பெரிய விசயமில்லை..."

"சார் நான் ஒன்னு சொல்லட்டுமா?"

"சொல்லுங்க..."

 "அவ அண்ணன் கிராமத்துல இருக்காருன்னு ரெட்டி சொன்னாருல்லியா? நாம ஏன் அவர விசாரிக்க கூடாது..."

"அங்கே போனா மட்டும் என்ன தகவல் கிடைச்சிடப்போகுது....அவளோட எங்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லைன்னு  சொல்ல போறான் அவ அண்ணன்..."

"இருந்தாலும் போயி பார்க்கலாம்...குடும்ப பகையில அவள யாராவது கொலை செஞ்சிருந்தா? நாம அவ அண்ணன் கிட்ட விசாரிச்சா ஏதாவது தகவல் கிடைக்கலாமில்லையா?"

"இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை...நாளைக்கே அரசர்குளத்துக்கு கிளம்புவோம்....அவளோட பி.ஏ.வ அப்புறம் பார்த்துக்குவோம்...."


வியாழனன்று விசாரணை தொடரும்.......

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக முந்தைய பதிவு.....

ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு விஜயகாந்த் வாழ்க....



Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. //புதுக்கோட்டை பக்கத்துல அரசர்குளம் என்ற கிராமத்துல


    என்ன அப்படியே உங்க ஊர பப்ளிஸிட்டி பன்றீங்களாக்கும்

    மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
    http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

    மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

    பதிலளிநீக்கு
  2. அரசர்குளத்துல கஸாலின்னு ஒருத்தர் இருப்பாரு..அவரை ரெண்டு தட்டுத் தட்டி விசாரிச்சீங்கன்னா, எல்லா உண்மையும் வெளில வந்திரும் இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.