என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 19, 2012

24 புத்தக கண்காட்சியும் பொதி சுமந்த நானும்.....(பாகம்-1)



 புத்தக கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு நண்பன் வடைபஜ்ஜி சிராஜின் அழைப்பையேற்று வெள்ளிக்கிழமை காலை சென்னையை வந்தடைந்தேன்.
வந்ததும் என்னிடம் இருந்த சென்னை நண்பர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டேன். நான் சென்னை வந்திருக்கும் விஷயத்தைமுதலில் கே.ஆர்.பி. செந்திலிடம் சொன்னேன். மகிழ்ச்சி தெரிவித்த அவர் மாலை புத்தக கண்காட்சியில்தான் இருப்பேன் வாங்க சந்திக்கலாம் என்றார். அடுத்ததாக, மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோரிடம் பேசினேன்.

இன்று வெள்ளிக்கிழமை வேலை இருப்பதால் நாளை பார்க்கலாம் என்றார்கள். சரி, நாம் மட்டும் போவோம் என்று முடிவுசெய்து மாலை கிளம்பினோம். அரங்கை அடைந்தோம்.

அங்கு டிஸ்கவரி புக் பேலசில் நண்பர் கே.ஆர்.பி., கேபிள் சங்கர் ஆகியோர் இருந்தார்கள். . அப்போது கேபிள் நானே உங்களுக்கு போன் செய்ய நினைத்தேன். நீங்கள் வந்துவிட்டீர்கள் என்றார். ஏன் என்றேன் புரியாமல். வரும் வாரத்திலிருந்து யுடான்ஸ் நட்சத்திரமாக உங்களை தேர்வு செய்திருக்கிறோம். அதற்காக உங்களை பற்றிய விபரம் வேண்டும் என்றார். சரி என்று சொல்லி அதற்குறிய விதிமுறைகளை கேட்டுவிட்டு சில நிமிடங்கள் அவர்களிடம் உரையாற்றிவிட்டு புத்தக தேடலில் இறங்கினோம்.


சில புத்தகங்களை வாங்கிவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள் சனிக்கிழமை மீண்டும் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இன்று சந்திப்போம் என்று நேரம் குறித்தோம்.

இவர்தான் பிராப்ள பதிவர் வடைபஜ்ஜி சிராஜ்


அதன்பின் நண்பர் கவிதைவீதி சௌந்தரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவரும் வேடந்தாங்கல் கருனும் வருவதாக சொன்னார்.

மதிய உணவிற்கு பின் நானும் சிராஜும் கிளம்பி கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்கு மெட்றாஸ்பவன் சிவாவும் எங்களுடன் இணைந்துகொண்டார். கவிதைவீதி சௌந்தரை தொடர்புகொண்டபோது முகப்பில் புதிய தலைமுறை மேடை அருகில் நிற்பதாக சொன்னார். அங்கு போய் அவரையும், கருனையும் சந்தித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஓ மனிதா என்று ஒரு குரல், திரும்பிப்பார்த்தால் பிரபாகரன் நின்றிருந்தார்.

சௌந்தர்-கருன்

பிரபா-சௌந்தர்

அங்கு சிறிது நேரம் பொழுதுபோனது. சிவாவும், பிரபாவும் உள்ளே தீராத விளையாட்டு பிள்ளை ஆர்.வி.எஸ் அவர்கள் காத்திருப்பதாகவும் போய் பார்த்துவிட்டு வருகிறோம் என்று கிளம்பினார்கள்.

சிவா- ஆர்விஎஸ்

ஆர்.வி.எஸ்- பிரபாகரன்

நான், சிராஜ், சௌந்தர்,கருன் ஆகியோர் அங்கிருந்து கிளம்பி ஒரு டீ(மாதிரி) குடித்துவிட்டு அரங்கினுள் நுழைந்தோம். நான் சில புத்தகங்களை வாங்கினேன். சிராஜ் வளைத்து வளைத்து வாங்கினான். ஏறக்குறைய பத்தாயிறம் ரூபாயை தாண்டியது பில்.


கருன், சௌந்தருடன் நான்


அடுத்த சில நிமிடங்களில், சௌந்தரும்,கருனும் விடபெற்றார்கள். அடுத்ததாக எங்களுடன் இணைந்தார் மின்னல்வரிகள் கணேஷ் சார்.

பிரபா- கணேஷ்

பின் அவரோடு சுற்றிவந்தோம். அப்போது எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு ஸ்டாலில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் சிவா சில கேள்விகளை கேட்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

பாலகுமாரன்

அவர் கேட்க நினைத்த கேள்விகளில் வில்லங்கம் இருந்ததால் அய்யோ சிவாவிற்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இருந்தாலும் சிவா தன் முடிவில் உறுதியாக இருந்ததால் மகனே உன் சமர்த்து என்று விட்டுவிட்டோம். சிவாவும் தைரியமாக பாலகுமாரனை நோக்கி முன்னேறினார்.

தொடரும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 கருத்துகள்:

  1. மெட்ராஸ் பவன் சிவக்குமாருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அவரிடம் பேசும்போது அறிந்துக்கொள்ளலாம். அவரின் தேடல்கள் விரைவில் பூர்த்தியாகும் என்று நினைக்கிறேன்...


    சிவா ஐயா பாலகுமாரனிடம் என்னென்ன கேள்விகள் கேட்டார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி அவசரப்பட்டா எப்படி? காத்திருங்கள்.

      நீக்கு
  2. ஆகா... ஆகா... சந்திப்புகள் பலமா இருந்திருக்கே... பாலகுமரனிடம் என்ன கேட்டார்... அறிய ஆவலாய் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரனிடம் சிவா கேட்டது என்னவென்று நாளை தெரியும்.

      நீக்கு
  3. என்ன கேள்வி கேட்டார் ?

    பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. சிவா கேள்வி கேட்ட(கெட்ட) பொழுது பாலகுமாரன் அவர்களின் முக பாவனையை
      ஃபோட்டோ எடுத்தீர்களா?

      நீக்கு
  5. பெயரில்லா19 ஜன., 2012, 7:08:00 PM

    நான் தான் தங்களை தவற விட்டு விட்டேன் கஸாலி. பொங்கல் பண்டிகைக்காக நான் எனது ஊருக்கு செல்ல நீங்கள் சென்னைக்கு வந்து விட்டீர்கள். அடுத்து முறை சென்னை வரும் போது அழைக்கவும். நான் உங்களை சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உங்களுக்கு போன் செய்தபோது திருவாரூரில் இருப்பதாக சொன்னீர்கள். இறைவன் நாடினால் அடுத்தமுறை பார்க்கலாம்.

      நீக்கு
  6. எனக்கு ஒரு ஃபோன் அடிச்சிருக்கலாமே :(

    பதிலளிநீக்கு
  7. அடக்கடவுளே... அதை நான் யுடான்ஸ் என்றல்லவா நினைத்தேன்? ‘உடான்ஸ்’ தானா தம்பி? புத்தகக் கண்காட்சி அனுபவங்களை சுவையாவே சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க! தொடருங்கள், படிக்கக் காத்திருக்கோம்!

    பதிலளிநீக்கு
  8. மிஸ் பண்ணிட்டேனே கஸாலி,பலரையும் சந்திக்கும் வாய்ப்பை!

    பதிலளிநீக்கு
  9. நீங்க பொதி சுமந்த கதை இந்த பாகத்துல வரலையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பின்னூட்ட பெட்டி அடிக்கடி ஒளிஞ்சுக்குது... அதனால எனக்கு நானே ரிப்ளை பண்ணிக்கிறேன்...

      நீக்கு
    2. அப்புறம் அந்த ஒழிக்கப்பிறந்தவன் புக் எப்போ ரிலீஸ்...

      நீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //இவர்தான் பிராப்ள பதிவர் வடைபஜ்ஜி சிராஜ்//

    ஹா ஹா ஹா..செம செம

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.