நண்பர்களே இந்தப்பதிவு நான் கேட்டதை,படித்ததை, படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்வதற்காகவே....
நான் கேட்டது.....
ஒரு பட்டிமன்றத்தில் நான் கேட்டது...
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
பந்திக்கு முந்து.....அதாவது சாப்பிடுவதற்காக பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, இலையில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுவதற்காக குனியும்போது நம் உடல் சற்று இலையை நோக்கி முன்னேறும். அதாவது முந்தும். அதுதான் பந்திக்கு முந்து.
படைக்கு பிந்து....அதாவது, படைவீரன் போர் புரியும் போது, வில்லில் பூட்டியிருக்கும் அம்பை விடுவதற்காக வில்லின் நாணை இழுப்பான். அப்படி இழுக்கும்போது அவன் உடல் சற்று பின்னேறும். அதாவது பிந்தும். அதுதான் படைக்கு பிந்து.
இதைத்தான் நம் ஆட்கள் பந்திக்கு முந்தி போகவேண்டும், படைக்கு பிந்திப்போகவேண்டும் என்று திரித்துவிட்டார்கள்.
======================
நான் படித்தது.....
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்த விளக்கம்....
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால்....
வழக்கமாக, மார்கழி மாதம் அதிகாலையில் பனி அதிகமாக இருந்து, எதிரில் இருக்கும் ஆட்களைக்கூட தெரியாமல் செய்துவிடும். வழி(பாதை)யும் தெரியாது. ஆனால், அதற்கடுத்த தை மாதத்தில், பனியின் கடுமை குறைந்து வழி நம் கண்களுக்கு புலப்படும். அதாவது வழி(பாதை) தெரியும் அல்லது பிறக்கும். இதுதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும்.
மேலும் பழமொழிகளின் விளக்கம் அறிய சுட்டி
==============================
படித்ததில் பிடித்தது....
நான் சமீபத்தில் துரை டேனியல் என்ற பதிவரின் தளத்தை படித்தேன். மிக அற்புதமாக எழுதுகிறார். அவரின் அவிழ்க்க முடியாத முடிச்சுகள்
என்ற கவிதை ஒன்றைப்படித்தேன். சிம்பிளாக, அருமையாக இருந்தது....படித்ததும் பிடித்தது. நீங்களும் படித்துப்பாருங்களேன்...
நான் போடவில்லை
ஆனாலும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முடிச்சுகள்
ஒருபக்கம்
ஒவ்வொன்றாய்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறேன்
நான்
மறுபக்கம்
கொத்துக் கொத்தாய்
போட்டுக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை.
ஆனாலும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முடிச்சுகள்
ஒருபக்கம்
ஒவ்வொன்றாய்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறேன்
நான்
மறுபக்கம்
கொத்துக் கொத்தாய்
போட்டுக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை.
அவரின் தள முகவரி: துரை டேனியல்
Tweet |
அனைத்தும் சுவாரஸ்யமாயிருந்தன. அந்த கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குமாப்ள விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!
பதிலளிநீக்குதங்களுக்கு பிடித்தது படித்தது நானும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஅழகிய தொகுப்பு
தை பிறந்தால், பந்திக்கு முந்து..சரியான விளக்கம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். தேங்க்ஸ் கஸாலி!
பதிலளிநீக்குஉண்மை தகவலை அறிந்து கொண்டேன் நன்றி
பதிலளிநீக்குஅழகிய தொகுப்பு
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபழ்மொழி விளக்கமும் கவிதை அறிமுகமும் அருமை
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள் த.ம 7
அறிமுகத்திற்கு நன்றி .. போய் பார்கின்றேன்
பதிலளிநீக்குநண்பர்களே உங்களுக்காக :
பதிலளிநீக்குரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
Romba Nanri Sir!Evvalo periya manasu ungalukku. Again and again i says a lot of thanks for you for this. God bless you and your family!.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு அழகியகோர்வை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சூப்பர் கவிதை..
பதிலளிநீக்குஅருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு