என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 31, 2011

38 இதை கவிதைன்னா சொல்லப்போறீங்க.....


ரங்கசாமியின் ஆடு
எதிர் வீட்டு முத்துசாமியின்
ஆட்டை முட்டியதில்
இரு வீட்டினருக்கும்
 நடந்த தகராறில்
ரங்கசாமியின் வீடும்
முத்துசாமியின் கடையும்
 அடித்து நொறுக்கப்பட்டது.
இருதரப்பும்  இப்போது
காவல் நிலையத்தில்
பஞ்சாயத்துக்காக....ஆனால்,
ரங்கசாமியின் ஆடும்
முத்துசாமியின் ஆடும்
இன்று  கந்தசாமியின்
 வயலில்
ஒன்றாக.....



Post Comment

இதையும் படிக்கலாமே:


38 கருத்துகள்:

  1. இதை கவிதைன்னு சொல்ல மாட்டோம்.. காமெடி கலக்கல்னுதான் சொல்லுவோம்.ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. கிட்டத்தட்ட செய்தி வாசிக்கற மாதிரி நடையில் சொல்லப்பட்ட சாதி மத பேதமை மறந்து ஒற்றுமையாய் இருக்க வேண்டும் மனிதன் என கருத்து சொல்லும் சட்டயர் காமெடி.. ம் ம்

    பதிலளிநீக்கு
  3. எப்படியோ இந்த வார ஓப்பனிங்க்லயே ஓவர் டேக் பண்ணீட்டீங்க..

    பதிலளிநீக்கு
  4. சி.பி.செந்தில்குமார் said... எப்படியோ இந்த வார ஓப்பனிங்க்லயே ஓவர் டேக் பண்ணீட்டீங்க..///
    ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். பினிசிங் சரியில்லாம போயிரும்.

    பதிலளிநீக்கு
  5. எவ்ளோ பெரிய கவிதை சொல்லி இருக்கீங்க? ஆட்டுக்குப் பதிலா ரங்கசாமியோட பொண்ணு, முத்துசாமியோட பையன் அப்படின்னு கற்பனை பண்ணிப் பாருங்க. கவிதைன்னு நீங்களே ஒத்துப்பீங்க:-)

    பதிலளிநீக்கு
  6. நல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை
    தலைப்புதான் குழப்புகிறது தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை.. Super..

    பதிலளிநீக்கு
  8. கவிதை என்று சொல்ல முடியாது. கருத்து என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  9. Urai nadai kavithainkala? Nallathan iruku. Naan mudivula 2 aadayum piriyani panitankalonu ninaichen. He he. ( mobile vazhiya comment podurenka)

    பதிலளிநீக்கு
  10. கோமாளி செல்வா said...

    Urai nadai kavithainkala? Nallathan iruku. Naan mudivula 2 aadayum piriyani panitankalonu ninaichen. He he. ( mobile vazhiya comment podurenka)
    மொபைல் மூலமும் கமென்ட் போட்டு தனது சின்சியாரிட்டியை காட்டிய செல்வா வாழ்க.....அப்படியே மொபைல் மூலம் வோட்டும் போட்டுடுங்க

    பதிலளிநீக்கு
  11. இதை வசன கவிதைன்னு ஒத்துக்கிட்டா எவ்வளவு கொடுப்பீங்க?

    பதிலளிநீக்கு
  12. இதுக்கு பேரு தான் சிறுபுள்ளத்தனம்.......ஹி ஹி!!!!!!

    பதிலளிநீக்கு
  13. கவித ....அர்த்தம் உள்ள கவித....

    பதிலளிநீக்கு
  14. கவிதை நன்றாக உள்ளது
    விருதின் Effect aa--

    நாமே ராஜா, நமக்கே விருது

    http://speedsays.blogspot.com/2011/01/awards.html

    பதிலளிநீக்கு
  15. இத கவிதன்னும் சொல்லலாம்,

    காமெடி கவிதன்னும் சொல்லலாம்

    ஒரு ஒற்றுமைக்கான உதாரணம்னும் சொல்லலாம்

    விலங்குகளிடமிருந்து கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கும்னும் சொல்லலாம்.

    ஆடுகளம் ஆடுகளம்னு சொல்றாங்களே, அது இது தானா? (#டவுட்டு)

    பதிலளிநீக்கு
  16. ஒற்றுமை மனிதனை தவிர மற்ற அனைத்திடமும் இருக்கு...

    இதுவும் உங்களுக்குதான்..
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  17. கவிதைனும் சொல்ல முடியாது கவிதை இல்லைனும் சொல்ல முடியாதே

    பதிலளிநீக்கு
  18. FARHAN said...
    கவிதைனும் சொல்ல முடியாது கவிதை இல்லைனும் சொல்ல முடியாதே//////////////////////////////////////////////

    இவரு கமல் ரசிகர்தான் எப்படி நம்ம கண்டுபிடிப்பு .........

    பதிலளிநீக்கு
  19. என்னவா இருந்தா என்னங்க ஆடுகளுக்கு இருக்கிற ஒற்றுமை நம்மகிட்ட இல்லைங்களே


    நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  20. ஹி... ஹி... ஹி .... கவிதை சூப்பருங்க! சிரிப்பும் வந்திச்சு, சிந்தனையும் வந்திச்சு!! நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்!!

    பதிலளிநீக்கு
  21. உங்களை தமிழின தலைவர் ஆட்சியில் அரசவை கவிஞராக்க சிபாரிசு செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
  22. இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்மப்பா...

    பதிலளிநீக்கு
  23. நல்ல சிந்தனை.இயல்பான வார்த்தைகள் நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  24. வைகை said...
    உங்களை தமிழின தலைவர் ஆட்சியில் அரசவை கவிஞராக்க சிபாரிசு செய்கிறேன்!//


    அதை நான் வழி மொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  25. நல்ல கவிதை,சிந்தனை,கருத்து. நல்ல கவிதை தான் போங்க..... ஒத்துக்குறோம்!

    பதிலளிநீக்கு
  26. கலக்கீட்டிங்க தல. இதை கவிதைன்னும் சொல்லலாம், அறிவுறைன்னும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  27. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....


    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  28. நல்லவேளை ஆட்டை வெட்டாமல் மேய விட்டு விட்டீர், வெட்டியிருந்தால் ராஜகிரி கஸ்ஸாலி எனும் பெயர் ராஜகிரி கசாயி என மாறியிருக்கும்:-))))

    பதிலளிநீக்கு
  29. koothanalluran said...

    நல்லவேளை ஆட்டை வெட்டாமல் மேய விட்டு விட்டீர், வெட்டியிருந்தால் ராஜகிரி கஸ்ஸாலி எனும் பெயர் ராஜகிரி கசாயி என மாறியிருக்கும்:-))))////
    ஹல்லோ....கூத்தாநல்லூரான். அது யாருங்க ராஜகிரி கஸ்ஸாலி. அவருக்கும் நமக்கு சம்பந்தம் இல்லேங்க...நான் ரஹீம் கஸாலி, அரசர்குளத்தான்

    பதிலளிநீக்கு
  30. கவிதையோ கவிதாவோ மேட்டர் நல்லா இருந்தா சரிங்கோ......

    பதிலளிநீக்கு
  31. சூப்பர் கவிதைன்னு சொல்லாவிடினும் நல்ல சிந்தனை உள்ள கவிதை என்று சொல்லித்தான் ஆகணும்...

    பதிலளிநீக்கு
  32. காரணம், நாமாகவே நமக்கு ஆறாவது அறிவு ஒன்று இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோமே அது அந்த ஆடுகளுக்கு இல்லை பாவம். அதனால தான் இப்படி நடந்துக்கிதுக. 5 பெருசா 6 பெருசா இது நம்பருள்ள அறிவு!நண்பன் இரா. தேவாதிராஜன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.